Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

‘உயிருள்ளவரை உஷா’ நாயகன் மாரடைப்பால் உயிரிழந்தார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு  வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கங்கா. சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கங்கா, சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமல் தனது சகோதரர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்  கங்கா இந்த நிலையில் 63 வயதான கங்காவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். கங்காவின் மறைவு  திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தில் கங்காவின் இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News