Thursday, April 11, 2024

துணிவு: ‘அதை’ சொல்லவே இல்லையே..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித்தின் துணிவு படம் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.   வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் வங்கிகள் கிரெடிட் கார்டு மியூச்சுவல் ஃபண்ட் பெர்சனல் லோன் என்ற பெயரில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை விவரிக்கிறது.  மேலும் தனியார் வங்கிகளில் கட்டண கொள்ளை குறித்தும் விரிவாக  சொல்கிறது.


முதல் காட்சியிலேயே ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார். அவரின் உடல்மொழி,  கிண்டல் சிரிப்பு, ஸ்டைலான நடனம்  அனைத்தும் அட்டகாசமாக, அமைந்துள்ளன.

படம் வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன்பு நடிகர்களை அவர்கள் கதாப்பாத்திரத்தின் பெயர்களுடன் படக்குழு அறிமுகப்படுத்தியது. மேலும் அஜித்தின் பெயர் என்னவாக இருக்கும் என சொல்லுங்கள் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.  அதற்கு ரசிகர்கள் அஜித்தின் பெயர் விநாயக் மகாதேவ்வாக இருக்கும் எனவும் அஜித்தின் கதாப்பாத்திரம் மங்காத்தா படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் தங்கள் யூகங்களை வெளியிட்டுவந்தனர்.  ஆனால், படத்தின் டிரெய்லரிலும் அஜித்தின் பெயர் குறிப்பிடவில்லை.

இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்து. படம் பார்த்த ரசிகர்களுக்கு அவர்களே எதிர்பாராத  சஸ்பென்ஸ் வைத்துவிட்டார் இயக்குநர்.  அதாவது, படத்தில் நடிகர் அஜித்தின் கதாப்பாத்திரத்துக்கு பெயரே இல்லை.

- Advertisement -

Read more

Local News