Thursday, April 11, 2024

“ஆடுகளம் 2 ”: கிசோர் சொல்லும் தகவல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வெற்றிமாறனுக்கும் நாயகன் தனுஷுக்கும் தேசிய விருது பெற்றுத் தந்த படம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இன்று வரையில் இருக்கிறது.

ஆடுகளம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆடுகளம் கிசோர் சமீபத்தில் இது குறித்து பேசினார்.

அவர், “என்னிடம் கூட பலரும் இதே கேள்வியை கேட்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறனிடமே இது குறித்து நான் கேட்டேன். அவரும்,’இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்’  என்றார். ஆனால் உறுதியாகச் சொல்லவில்லை. ஆனாலும் அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றே நினைக்கிறேன்” என்றார் கிசோர்.

ஆக, ரசிகர்களின் ஆசை நிறைவேறப்போகிறது.

- Advertisement -

Read more

Local News