Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

பிக்பாஸ் சீஸன் 4-ல் இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாவா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியின் டாப் மோஸ்ட் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 4-வது சீஸன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா, அறந்தாங்கி நிஷா, சனம் ஷெட்டி, கேப்ரில்லா, சம்யுக்தா, அனிதா சம்பத், சுரேஷ், ரியோ, சோம்சேகர், ஆஜீத், வேல்முருகன், பாலா, நடிகர் ஆரி, நடிகர் ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன் என்று 16 பேர் போட்டியிடுகின்றனர். கடைசி நபராக வைல்ட் கார்டு எண்ட்ரியில் நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளினியுமான அர்ச்சனா உள்ளே வந்தார்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உறுப்பினர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். மக்களால் அதிகமாக விரும்பப்படாத நபரை ஓட்டெடுப்பு நடத்தி வெளியேற்றுவார்கள்.

சென்ற வாரம்தான் நிகழ்ச்சியின் முதல் வாரம் என்பதால் யாரையும் வெளியேற்றவில்லை. ஆனால் இன்றைக்கு இரண்டாவது வாரம் என்பதால் நிச்சயமாக ஒருவர் வெளியேறுவார்.

சென்ற வாரமே எலிமினேஷன் டீமில் ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, ரம்யா பாண்டியன் என்று 4 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் வாக்கெடுப்பில் காப்பாற்றப்பட்டவர்கள் பட்டியல் நேற்றைக்கு வெளியிடப்பட்டது. அந்த லிஸ்ட்டில் ஷிவானியும், ரம்யாவும் இடம் பிடித்தார்கள்.

கடைசியாக இருக்கும் ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவரில் ஒருவர் இன்றைக்கு வெளியேற்றப்படுகிறார். இதற்கான மூன்றாவது புரமோவும் தற்போது வெளியிடப்பட்டுவிட்டது.

நமக்குக் கிடைத்த உறுதியானத் தகவலின்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து
இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாதான் என்று தெரிகிறது..!

- Advertisement -

Read more

Local News