தமிழில் ரஜினி மற்றும் பிரபு இணைந்து நடித்து எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1988ல் வெளியான “குரு சிஷ்யன்” படத்தில் தமிழில் அறிமுகமானார் நடிகை கவுதமி. அதன் பிறகு கமல், விஜயகாந்த், ராமராஜன் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டவர் ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்றார். கவுதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உண்டு.
சினிமாவில் நடிக்க வருவதாக செய்திகள் வெளியானபோது, அதை அவர் மறுத்து வந்தார். தற்போது தனது மகள் சுப்புலட்சுமிக்கு லண்டனில் நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கிறாராம் கவுதமி, விரைவில் ஒரு படத்தில் தனது மகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.