Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ரகுரவன் எடுத்த ரிஸ்க்! பயந்த கே.எஸ்.ரவிக்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகர் ரகுவரனின் நடிப்பு குறித்து சொல்ல வேண்டியதே இல்லை. இந்நிலையில்,  புரியாத புதிர் படத்தின் மூலம் அறிமுகமாகி, சூப்பர் டைரக்டர் என பெயர் பெற்ற கே.எஸ்.ரவிக்குமார் , தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

“படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ரகுவரன், இறந்துவிடுவது போல் காட்சி உள்ளது. இந்த காட்சியில் அவரது மனைவியாக நடித்த ரேகா பீரோவின் கதவை திறக்கும்போது அதில் இருந்து ரகுவரன் இறந்து விழுவார். அவரது கழுத்து அறுந்து ரத்தம் வரவேண்டும் இதுதான் காட்சி.

இந்த காட்சிக்காக ரகுவரனின் கழுத்தில் சிகப்பு சாயம் பூசப்பட்டது. ஆனால் அவருக்கு வியர்வை அதிகம் வந்ததால் சாயம் நிற்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் நிற்காததால், ஒரு கத்தியில் சிகப்பு பவுடரை வைத்து கழுத்தில் தேய்த்துக்கொண்டிருந்தார். இதை பார்த்த நான் அதிர்ச்சியில் என்ன பண்ற என்று கேட்டேன்.

ரத்த சாயம் நிற்கவில்லை. அதனால் கத்தியில் வைத்து கழுத்தியில் தேய்க்கிறேன் என்று சொன்னார். கொஞ்சம் அழுத்தி தேய்ச்சா சொத்துபோய்டுவ… எனக்கு முதல் படம் எதாவது விபரீதம் ஆகிவிட போகிறது என்று சொல்லி கத்தியை பிடுங்கிவிட்டேன். நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்வார் ரகுவரன்” என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News