இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல திரைப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி என அனைத்து படங்களுமே கவனத்தை ஈர்த்தன. மேலும் தற்போது ஜெ பேபி, பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இரண்டாவது படமாக இயக்கவிருக்கும் படத்தையும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.
இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோ மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகவிருக்கிறது. அதோடு, நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.