குடியரசு தினத்தை முன்னிட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கையும்
இசையமைப்பாளருமான இஷ்ரத் காதரி “எந்தையும் தாயும் – வந்தேமாதரம்” ஆகிய பாரதியார் பாடல்களை இசை அமைத்து, பாடி வெளியிட்டு உள்ளார்.
மாதேஷ் இயக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்சஸ் 11 நிறுவனம் இந்த பாடலை தயாரித்துள்ளது.
தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் வீர விளையாட்டுக்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்பாடல், மத நல்லிணகத்தை வலியுறுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
பாடலின் முதல் பிரதியை திமுக வின் துணை பொதுச் செயளாலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பெற்றுக்கொண்டார்.
பாடல் குறித்து இஷ்ரத்காதரி கூறும்போது, “நம் நாட்டின் பெருமைகளை கூறவும், தாய் நாட்டின் மீதுள்ள தனது நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கினேன். இதனால் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.