Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

திருட்டுப்பட்டம்.. கலங்கிய தங்கவேலு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர், மறைந்த தங்கவேலு.  இவர், நடித்த முதல் படம் சதிலீலாவதி படம் தான். ஆனால் அந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்துத்தான் அடுத்த பட வாய்ப்பு வந்தது.

சிறு சிறு வேடங்கள் தொடர்ந்து கிடைத்து வந்தன. அப்போது ஒரு படத்துக்கு அவருக்கு ரூ.50தான் சம்பளம்.

இந்த நிலையில், என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த படத்தில், அட்வான்ஸ் தொகையாக 5000 ரூபாயை  அளித்தார்.

மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார் தங்கவேலு. ஆனால் அவரது பெரியப்பாவோ,

‘ இவ்வளவு தொகை உனக்கு எப்படி கிடைத்தது.. எங்கேயோ திருடிக்கொண்டு வந்துவிட்டாய்’ என்று சொல்லி திட்டியிருக்கிறார்.


தங்கவேலு சொல்லியும் கேட்காமல் நேராக என்.எஸ்.கே.வீட்டிற்கே சென்ற பெரியப்பா, அந்த பணத்தைக் கொடுத்து மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

பதறிய என்.எஸ்.கே அந்த பணத்தை தான் தான் கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.

முன்பு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த தங்கவேலு இது குறித்து கூறி, ‘நேர்மையாக சம்பாதித்தாலும், பெரிய தொகை என்றால் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது’  என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News