Saturday, September 21, 2024

மூணாறில் நடந்த அரசியல் நிகழ்வினை சொல்ல வரும் ‘ரிபெல்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

STUDIO GREEN மற்றும் Thirukumaran Entertainment ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் G.V.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் ரிபெல்’ படம்  இன்று காலை பூஜை நிகழ்வுடன் துவங்கியது..!

இந்தப் படத் துவக்க விழாவில் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக் குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் அம்மா சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் பா.ரஞ்சித் கிளாப் அடித்து படத்தினைத் துவக்கி வைத்தார். பூஜையை தொடர்ந்து, படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ரஞ்சித் பேசும்போது, “ஞானவேல் சார், C.V.குமார் சார் இருவரும் இணைந்து புதுசா ஒரு படம் ஆரம்பிச்சிருக்காங்க. இந்தக் கூட்டணி எனக்கு ரொம்ப பிடிச்ச கூட்டணி.  இதுல ஜீவி சார் நடிக்கிறார். அவருக்கு என் படங்கள் பிடிக்கும். என் படங்களை பார்த்துவிட்டு பேசுவார். அவருடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில், விரைவில் ஒரு படம் செய்ய பேசிட்டு இருக்கோம்.

இந்தப் படம் பற்றி சொன்னார்கள். இந்தப் படம் முக்கியமான ஒரு ஊரின் வரலாறை பேசுவதாக சொன்னார்கள். மூணாறு ஊரின் அரசியல் எனக்கு தெரியும். அந்த அரசியலை இந்தப் படம் பேசுவது மகிழ்ச்சி. சிறப்பான படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன்…” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசும்போது, “பழைய கூட்டணி மீண்டும் இங்கு இணைந்திருக்கிறது.  எல்லோரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று பேச்சிலர் படம் பார்த்தேன், நன்றாக இருந்தது. அடுத்து ஜெயில் படமும் நன்றாக வந்திருக்கிறது. கூழாங்கல் பல விருதுகளை வென்றிருக்கிறது. தமிழ் சினிமா தற்போது நல்ல பாதையில் பயணிக்கிறது. இன்னும் நிறைய நல்ல படங்கள் வரவுள்ளன. இந்தப் படமும் அந்த வரிசையில் இணையும் படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது, “தமிழ் சினிமாவில் இது ஒரு வெற்றிக் கூட்டணி. K.E.ஞானவேல் ராஜா மற்றும் C.V.குமார் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை செய்தார்கள்.  அவர்கள் கூட்டணியில் இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும். ஜீ.வி. தயாரிப்பாளர்கள்  விரும்பும் நடிகராக இருக்கிறார். இயக்குநர் ரஞ்சித், ஆர்யாவை பெரிய ஹிரோவாக்கி விட்டார். அதே போல் ஜீவியையும் அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும். இந்தப் படத்தில் மிகச் சிறந்த கூட்டணி அமைந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.

நடிகர் ஆரி பேசும்போது, “ரிபெல்’ என்கிற தலைப்பு எல்லோருக்கும் பொருந்தாது. சமுகத்தின் மீது அக்கறை கொண்ட ஜீ.வி. சாருக்கு நிச்சயமாகப் பொருந்தக் கூடிய தலைப்புதான் இது. இந்தப் படத்தில் மக்களுக்கான அரசியலை பேசவுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்…” என்றார்.

இயக்குநர் நிகேஷ் பேசும்போது, “இது ஒரு அரசியல் படம். ரஞ்சித் சார் திரைப்படங்கள்தான் எனக்கு சினிமாவை கற்று தந்தது. அவர் இங்கு வந்து வாழ்த்தியது மகிழ்ச்சி. இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஞானவேல் ராஜா மற்றும் C V குமார் சாருக்கு நன்றி. இந்தப் படத்தை புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்ட ஜீவி சாருக்கு நன்றி. சமூகத்திற்கு தேவையான படமாக இப்படம் இருக்கும்..” என்றார்.

இயக்குநர் கௌரவ் பேசும்போது, “ரிபெல் என்ற தலைப்பே சூப்பரா இருந்தது. C.V.குமார் திரைக்கதையில் மிகவும் ஞானம் கொண்டவர். அவருக்கு துணையாக ஞானவேல் ராஜா இருக்கிறார். ஆரம்பமே மிகப் பெரும் விழாவோடு ஆரம்பிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் சிறந்த படமாக வர அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் C.V.குமார் பேசும்போது, “இதுவரையிலும் நான் 24 படம் பண்ணிட்டேன். இவ்வளவு பெரிய பூஜை இந்தப் படத்திற்குத்தான் வாய்த்திருக்கிறது. இந்தப் படத்தை ஒப்புக் கொள்ளவே, ஒரு தைரியம் வேண்டும்.  அது ஞானவேல் ராஜா சாரிடம் இருக்கிறது.

இது ஒரு அரசியல் கதை, இது எப்படி அமையப் போகிறது என பயம் இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் நல்ல கூட்டணி அமைந்திருக்கிறது. கதையும் நன்றாக உள்ளது. ஒரு சிறந்த அரசியல் படமாக இப்படம் இருக்கும்…” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, “நேற்றுதான் பேச்சிலர்’ படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்காக ஜீ.வி.க்கு வாழ்த்துகள்.

இந்த ரிபெல்’ கதையை நிகேஷ் சொல்லும்போதே எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஒரு கல்லூரி கதை. அரசியல், தமிழுணர்வு எல்லாம் இதில் கலந்துள்ளது. இந்தப் படத்திற்கு ஜீ.வி.தான் சரியாக இருப்பார் என நிகேஷிடம் சொன்னேன். அவரும் கதையைக் கேட்டுவிட்டு,  நான் ரசித்த இடங்களை அப்படியே அவரும் ரசித்ததாக சொன்னார். இப்போது ரிபெல்’ படத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

ரஞ்சித் பிரதர் உடன் ஆரம்பத்தில் படம் செய்துள்ளேன். இன்று அவர் பெரிய உயரத்தில் இருக்கிறார். நலன் சாருடன் அடுத்த அறிவிப்பு விரைவில் வரும். இருவரும் இங்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.

இன்றைக்கு மாலை  எங்கள் நிறுவனத்தின் சார்பில் வேறொரு அறிவிப்பும் வருகிறது. இரண்டு படங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை. இந்தப் படம் ஒரு சிறப்பான அரசியல் கதையை சொல்லும்…” என்றார். 

நடிகர் ஜீவி பிரகாஷ் பேசும்போது, “ஞானவேல் ராஜா சார்தான் என்னை ஒரு நடிகனாக என்னை அறிமுகப்படுத்தி வெற்றி பெற வைத்தார். ஒரு நடிகனாக எனக்கு ஒரு பிஸினஸை ஏற்படுத்தி நிலை நிறுத்தியவர் அவர்தான். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்வது மகிழ்ச்சி.

நாங்கள் இணைந்து செய்த அனைத்து படங்களுமே மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

நிகேஷ் சொன்ன திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு கதை இதில் இருக்கிறது. அதை நாங்கள் சரியாக சொல்வோம் என்று நம்புகிறேன்..” என்றார்.  

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “ஞானவேல் ராஜா சாரே ஒரு ரிபெல்தான். அவருடன் ஜீ.வி. எனும் இன்னொரு ரிபெல் இணைந்து இந்த ரிபெல்’ படத்தை உருவாக்குகிறார்கள்.

இயக்குநர் நிகேஷ் அருமையான திரைக்கதையை எழுதியுள்ளார். இந்தப் படம் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். உங்கள் அரசியலை இங்கு வந்திருக்கும் ரஞ்சித் சாரிடம் கற்றுக் கொள்ளுங்கள். அரசியல் கருத்துக்களை தெளிவாக பேசக் கூடியவர் அவர்.

நேற்று பேச்சிலர்’ படம் பார்த்தேன். அந்தப் படத்தில் ஜீ.வி.யின் நடிப்பு அசத்தலாக இருந்தது. ஜெயில் படத்தில் இன்னும் வேறொரு கோணத்தில் நடித்திருக்கிறார். ஒரு படத்திற்கு பெரும் அர்ப்பணிப்பான உழைப்பை தந்து, தயாரிப்பாளருக்கு பிடித்த நடிகராக வளர்ந்து வருகிறார். இந்தப் படம் ஒரு அற்புதமான கூட்டணியுடன் உருவாகிறது.” என்று வாழ்த்தினார்.

- Advertisement -

Read more

Local News