Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

“எஸ்.பி.பி.யை பாரதிராஜா எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. அவர் மாத்திப் பேசுறாரு..” – இளையராஜாவின் வருத்தம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை நான்தான் இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்…” என்று பல பேட்டிகளில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா கூறியிருக்கிறார்.

அதேபோல் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இதை ஆமோதித்து, “பாரதிராஜாதான் இளையராஜாவிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்…” என்று பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

ஆனால், “இது பொய்யான தகவல்..” என்கிறார் இசைஞானி இளையராஜா. இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் “பாலுவை, பாரதிராஜா என்னிடம் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை…” என்று உறுதியாகச் சொல்கிறார்.

இளையராஜா இது குறித்துப் பேசுகையில், “வெங்கட்ராவ் என்ற ஆந்திரப் பத்திரிகை நிருபரின் மனைவி நடத்தி வந்த நர்சரி பள்ளியின் விழாவிலதான் எஸ்.பி.பி. எனக்கு அறிமுகமானார். அப்போது, ‘பள்ளியில் இசை நிகழ்ச்சி நடத்த பாலு வருகிறார். அதற்குப் பக்க வாத்தியம் வாசிப்பீங்களா..?’ன்னு என்னிடம் கேட்டார்கள். ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து பாலு, ‘என்னோடு நிரந்தர இசைக் குழு அமைத்துப் பணியாற்ற வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். ஆர்க்கெஸ்ட்ரா துணையோடு அவருக்கு இசைக் குழுவை அமைத்து நடத்தினோம். எங்கள் இருவரது ரசனையும் நெருங்கி வந்ததால், நெருங்கிய நண்பர்களானோம்.

உண்மை இப்படியிருக்க… எல்லா மேடைகளிலும் பாரதிராஜாவும், பாலுவும் ‘பாரதிராஜாதான் பாலுவை இளையராஜாவுக்கு அறிமுகப்படுத்தினார்’ என ஏன் சொன்னார்கள் என எனக்குத் தெரியவில்லை…” என்று சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News