Saturday, September 14, 2024

தனுஷ் தேனீ போல் வேலை செய்யும் டைகர்… நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் இந்த மாதிரி தான் இருக்கும் – எஸ்.ஜே.சூர்யா! #NEEK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2002இல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தனுஷ் அறிமுகமானார். தற்போது, தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளதுடன், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் சிறப்பாக பங்களிக்கிறார்.

தனது 50ஆவது படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார் தனுஷ். ‘ராயன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராயன் படத்துக்குப் பிறகு தனுஷ் தெலுங்கில் ‘குபேரன்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, இளையராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார். இதற்கடுத்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ எனும் படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படம், ‘பிரேமலு’ போன்ற படமென என்றும் அவர் தேனீ போல் வேலை செய்யும் டைகர் என எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News