Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

என்ன சொல்கிறது ஜி.வி.யின் ரிபெல்? இயக்குனர் நிதேஷ் மனம்திறப்பு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்படத்தில் மக்களுக்காய் குரல் கொடுப்பதும் போராடுவதும் என்று படத்தோடு மட்டும் முடித்து கொள்ளும் நடிகர்கள் தான் அதிகம்.ஒரு சில நடிகர்கள் தான் நிஜத்தில் குரல் கொடுக்கின்றனர் அதில் ஜி.வி பிரகாஷ் தமிழர்களுக்காய் என்றும் குரல் கொடுப்பவர் என ரிபெல் இயக்குனர் நிதேஷ் படத்தையும் பற்றியும், ஜி.வி.யை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர், ரிபெல் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை அழுத்தமாக பேசும் படம்.1980களில் நடந்த கதை இது. மூணாரில் இருந்து பாலக்காட்டிற்கு படிக்க செல்லும் தமிழ் மாணவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை கேம்பஸ் பொலிட்டிக்கலாய் சொல்லும் வகையில் திரைப்படத்தை அமைத்துள்ளோம்.

மூணாரில் வாழ்ந்த தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை அதிகமாக செலவு செய்து படிக்க வைக்கும் அளவிற்கு வசதி இல்லாமல் இருந்தார்கள் அதனால் கல்வி கட்டணம் குறைவாக உள்ள கேரளக் கல்லூரிகளுக்கு அனுப்பி படிக்க வைப்பார்கள். அங்கு சுற்றி தமிழ் ஆட்கள் நிறைய இருப்பது அவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்படுத்தும் என்று நினைத்தார்கள்.ஆனால் அப்படி படிக்க செல்லும் மாணவர்களுக்கு மொழி ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளை எதிர்த்து ஒருவன் எப்படி போராடினான் என்பதே ரிபெல் என்கிறார்.

இது உண்மை சம்பவம்.ஒன்றல்ல இரண்டல்ல 1980களில் இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது அவற்றை ஒன்றாக இணைத்து ஒடுக்குமுறைகளை ஒருவன் தைரியமாக எதிர்த்தால் எப்படி இருக்குமென கற்பனையும் கலந்து இத்திரைகதையை அமைத்ததாக கூறினார்‌.

ஜி.வி பிரகாஷ் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலக்காட்டிற்கு படிக்க செல்லும் ஜி.வி பிரகாஷ் தமிழ் மலையாளம் என பிரித்து நடக்கும் ஒடுக்குமுறைகளை எப்படி அணுகிறார் என்பதும் தன்னோடு கல்லூரியில் படிக்கும் மலையாள மாணவியாக சாரா கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ மீது ஏற்படும் காதல் என இப்படம் நகரும்.இவர்களோடு கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கண்டிப்பா அவர் வசனங்கள் நம்மளோட பிரதிபலிப்பு.96 படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்யா‌ பாஸ்கர், கல்லூரி வினோத் மற்றும் சுப்பிரமணிய சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்றார்.

1980 நடந்ததை இப்போ படமாக எடுக்க காரணம் என்ற கேள்விக்கு நான் என்னுடைய சொந்த ஊரான மூணாரில் 1996ல் பிறந்தேன் என் வலி உங்களுக்கு இப்படத்தை பார்த்தால் புரியும்.இப்படத்தை சென்சார்ரில் பார்த்த அதிகாரி பாதிக்கப்பட்ட ஒருவரால் தான் இந்த படத்தை எடுக்கமுடியும் என்றார். ஐ.ஏ.எஸ் படித்த அவர் அங்கு வேலை செய்யும் இடத்தில் இதே பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளார்.இந்த சம்பவங்கள் தற்போது குறைந்து இருக்கலாம் ஆனால் இன்னும் முழுமையாக தீரவில்லை என்றார் அழுத்தமாக சொல்லத்தான் 1980களை தேர்ந்தெடுத்தேன் என்றார்.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதும்போதே தமிழுக்காய் நிற்பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.தமிழுக்காய் தமிழர்களுக்காய் எப்போதும் நிற்பவர் ஜி.வி பிரகாஷ் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் கதை கேட்ட ஸ்டுடியோ க்ரீன் ஜி.வி தான் நடிக்க வேண்டும் என்றார்கள். தமிழுக்கான கதை என்றதும் ஜி.வி அவர்கள் மிகவும் ஆர்வமாக கதை கேட்டார் கண்டிப்பாக இந்த படத்தில் நான் நடிப்பேன் என்று உறுதிக்கொடுத்து நடித்தும் கொடுத்தார்.இவர் திரை பயணத்தில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றார் இயக்குனர் நிதேஷ்.

- Advertisement -

Read more

Local News