Saturday, September 14, 2024

எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன்… இயக்குனர் பாரதிராஜா வாழை படம் குறித்து நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வருகிறது. பலரின் பாராட்டுகளைப் பெற்ற மாரி செல்வராஜஅ- இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களும் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர், சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பாரத்து யோசித்தது உண்டு. ‘வாழை’ அப்படியொரு படம். படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார். மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.

சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சுகிற வகையில் என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணியிருக்கான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன்.

- Advertisement -

Read more

Local News