‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது.

சுற்றுலாமையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது, வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது.
குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாள குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்து கொண்டிருக்கும். இந்தப் படத்தில் காட்டுவது போல குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக் கொண்டே இருப்பார்கள்.
இப்படி ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தையும், மலையாளிகளை பற்றியும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் வெளியான போது கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன்.
இப்போது பிரிதிவிராஜ் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தை ஒரு சிறந்த படம். இதை மலையாளத்தில்தான் செய்ய முடியும்’ என்று அளவில்லாமல் பாராட்டியிருக்கிறார்.
மலையாளத்தில் தான் மனித வாழ்க்கையை இப்படி நிஜமாக சித்தரிக்கும் படம் எடுக்க முடியும் என்று தனது பிளாக்கில் எழுதியுள்ளார். உலக சினிமாவில் மலையாளத்தின் அடையாளமாக ‘ஆடு ஜீவிதம்’ மாறும் என்றும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைக்கு இந்தியாவில் மலையாளத்தில் மட்டுமே இவ்வளவு கலைநயத்துடன் படம் எடுக்க முடியும். பெங்காலி சினிமாவுக்கு முன்பே இது சாத்தியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆடு ஜீவித்ததை தமிழில் அல்லது தெலுங்கில் அல்லது இந்திய மொழிகளிலும் இப்படியே எடுக்கவே முடியாது. படம் சலிப்பூட்டுகிறது. ஒரே துக்கமாக இருக்கிறது. கதை பரபரப்பாக நகரவில்லை. இரண்டாம் பாதியில் புதியதாக ஒன்றும் நிகழவில்லை. பாலைவனத்தை மட்டுமே காட்டுகிறார்கள் என்றெல்லாம் தமிழ் ரசிகன் உடனே சொல்லிவிடுவான்.
ஒரு படத்தின் உண்மையான தொடர்புறுத்தல் என்பது கதைச்சம்பவங்கள் வழியாகவோ, திருப்பங்கள் வழியாகவோ நிகழ்வது அல்ல. காட்சி வழியாக, அதாவது பார்வையாளனின் கண் வழியாக நிகழ்வது. அவ்வாறு நிகழவேண்டுமேன்றால் கதைச்சம்பவங்கள் பெரிதாக இருக்கலாகாது. திருப்பங்கள் நிகழக்கூடாது. அவை காட்சிகளில் இருந்து பார்வையாளனை வெளியே விலக்கிவிடும்.
ஆனால், கண் வழியாக சினிமாவை உணரமுடியாத தொடக்கநிலை ரசிகன் காட்சிகளை நீண்ட நேரம் பார்க்க மாட்டான். ஏதாவது நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பான். ஏமாற்றத்தால் சலிப்புறுவான்.
ஆனால், இந்த சமரசமே அற்ற யதார்த்தம்தான் உண்மையான மலையாள சினிமா. இரண்டாம் பாதியில் நம்மை சூழ்ந்து கொள்ளும் காட்சிகள் அளிக்கும் அழுத்தமும் அவை நம் கண்வழியாக கனவுக்குள் நுழைவதும்தான் மெய்யான சினிமா அனுபவம். நாம் உண்மையில் என்ன அனுபவத்தை அடைந்தோம் என்றே அப்போது உணரமாட்டோம். ஆனால், நீண்டநாள் நினைத்திருப்போம்.
அந்த வரிசையில் வரும் படம் ‘ஆடு ஜீவிதம்’. அசலான படம். மகத்தான படம். இன்னும் பல தலைமுறைக்காலம் மலையாளச் சினிமாவின் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக இது கருத்தப்படும் என்று தனது வலைப்பத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார்.