Saturday, September 14, 2024

வெற்றி விழா மேடையில் பிரசாந்த்-க்கு எப்போது திருமணம் எப்போது என கேட்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்… வெட்கத்துடன் சிரித்த பிரசாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக மாறியுள்ளதாகவும், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக குறிப்பிடப்பட்டு சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்ட போஸ்டர் எல்லாம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், நேற்று நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கே.எஸ். ரவிக்குமார், பிரசாந்துக்கு எப்போது திருமணம் செய்வீர்கள் என்று, நிகழ்ச்சியில் மைக் முன்னிலையில் நேரடியாக கேள்வி கேட்டார். உடனடியாக மைக்கை பிடித்த தியாகராஜன், அடுத்த வேலை அதுதான் எனத் தெரிவித்தார். தனது மகன் பிரசாந்தின் திருமண வாழ்க்கை சரியாக அமையாமல் இருப்பதே, தன் மனைவிக்கும், தமக்கும் ஒவ்வொரு நாளும் வலியை கொடுக்கும் விஷயம் என்று குறிப்பிட்டார்.

‘அந்தகன்’ பட வேலைகள் முடிந்த பின், அடுத்த பட வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நல்ல பெண்ணை பார்த்து பிரசாந்துக்கு திருமணம் செய்து வைப்பதே தனது அடுத்த வேலை என தியாகராஜன் கூறினார். இதைக் கேட்ட பிரசாந்த் வெற்றி விழா மேடையில் வெட்கப்பட்டு, பின்னாடி ஒளிந்துக் கொண்ட காட்சிகள் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

- Advertisement -

Read more

Local News