Thursday, April 11, 2024

டப்பிங்கில் நிஜமாகவே கதறி அழுத யோகிபாபு! 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரதீப் ரங்கநாந்தன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் யோகிபாபு.

படத்தில், தன்னுடைய செல்போனை தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணிடம் கொடுக்கவே மாட்டார். ஏனெனில், தனது தோற்றத்தை வைத்து, வாட்ஸ்அப் குரூப்பில் தன்னை பற்றி கிண்டலாக தனது நண்பர்கள் விமர்சிப்பதை மணப்பெண் தெரிந்துகொள்ளக்கூடாது என நினைப்பார்.

இந்நிலையில், இயக்குநர் பிரதீப் ஒரு வீடியோவில், “லவ் டுடே படத்தின் டப்பிங்கின்போது குறிப்பிட்ட காட்சியில் யோகிபாபுவால் பேசமுடியவில்லை. ஏனெனில் இது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது போலவே இருக்கிறது. நான் மொத்தமா ஆஃப் ஆயிட்டேன். நாளைக்கு வந்து பேசுறேன் என்றார். அடுத்தநாள் வந்த பின்னரும் அவரால் பேச முடியவில்லை. அதன்பின் அவரே சில வசனங்களை சொன்னார். ‘சாணி உருண்டை மாதிரி இருக்க’ என்கிற வசனத்தையெல்லாம் அவர் சேர்த்து பேசினார். அவரை அப்படியெல்லாம் பலரும் அசிங்கப்படுத்தியதாக கூறினார்’ என பிரதீப் கூறியிருந்தார்.

- Advertisement -

Read more

Local News