அனுமேனன் இயக்கத்தில் வித்யா பாலன் நடிக்கும் படம் ‘நியாத்’. இதில் அவர், ஒரு கொலை வழக்கை துப்பறியும் சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்கிறார்.
இது குறித்து அவர், “இது வழக்கமான துப்பறியும் கதை அல்ல. எனக்கு படம் முழுதும் ஒரே ஒரு காஸ்ட்யூம் மட்டும்தான். முழு திரைப்படத்திலும் அந்த ஒரே காட்ஸ்யூமில் தான் வருகிறேன். இதற்காக படக்குழுவினர், ஒரே மாதிரியான 3 உடைகளைத் தந்த போதும், ஒரே உடையை மட்டுமே முழு படத்திற்குமாகப் பயன்படுத்தினேன்” என்றார்.