நடிகர்கள் விஜயும், சந்தானமும் நல்ல நண்பர்கள். இவர்களுக்கு இடையே நடந்த ஒரு சம்பவத்தை பத்திரிகையாளர் அந்தணன், வீடியோ பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
“ஒரு நாள் மாலை, நடிகர் விஜய் சந்தானத்துக்கு அலைபேசி, பெண் குரலில் பேசி இருக்கிறார். ‘ தமிழில் சிறந்த ஹீரோ நீங்கதான்.. உங்கள் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. எனக்கு உங்கள் படத்தில் வாய்ப்பு வேண்டும்.. உங்களை இன்று இரவு சந்திக்கலாமா’ என கேட்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் தனது படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டு இருந்த சந்தானமும், வரச் சொல்லி விட்டார். தன்னை அந்த ‘பெண்’ புகழ்ந்து பேசியதும் மகிழ்ச்சி அளித்து இருக்கிறது.
ஆனால் இரவு ஒரு மணி வரை காத்திருந்தும் எந்த பெண்ணும் வரவில்லை. பிறகுதான் விஜய் செய்த வேலை என்று தெரிந்திருக்கிறது” என்றார் அந்தணன்.