’பிச்சைக்காரன் -2’ படத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் நலம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், , “மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், தனது உடல் நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.