Friday, April 12, 2024

சிம்புவிற்கு புத்தம் புது காரை பரிசளித்த அவரது தாயார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிம்பு சிறந்த நடிகர் என்பதில் தமிழ் சினிமா உலகில் உள்ள எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரிடம் இருந்த மிகப் பெரிய குறை படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராதது மட்டுமே.

ஆனால், இப்போது தன்னுடைய பழக்க வழக்கங்களை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ள சிம்பு சொன்ன நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது மட்டுமின்றி சமீபத்தில் நாற்பதே நாட்களில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய முழு காரணமாக இருந்திருக்கிறார். அந்த படத்திற்காக மட்டும் தொடர்ந்து 33 நாட்கள் அவர் பணியாற்றி இருக்கிறார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் சென்னைக்கு வந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஓய்வெடுத்த சிம்பு, மறுநாளே வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கின்ற ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி சென்றார். இப்போது பாண்டிச்சேரியில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிம்புவின் அயராத உழைப்பை பாராட்டுகின்ற வகையிலே புத்தம் புதிய கார் ஒன்றினை வாங்கி சிம்புவுக்கு பரிசாக அளித்துள்ளார் சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர்.

அவர் பரிசளித்துள்ள அந்தக் கார் சிம்பு நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கார் என்பதால் அளவில்லாத மகிழ்ச்சியோடு அந்த காரில் இப்போது சவாரி செய்து கொண்டிருக்கிறார் சிம்பு.

- Advertisement -

Read more

Local News