கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோனா வசூலையும் குவித்து உள்ளது. இவர் நடித்து, தமிழில் வெளியான நான் ஈ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அவரது அந்தரங்க வீடியோவை வெளியிடப்போவதாக மர்ம நபரிடமிருந்து கடிதம் வந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில், அவரது அறக்கட்டை தலைவரான ரமேஷ் கிட்டி என்பவரை பெங்களூரு போலீசார் கைது செய்து உள்ளனர்.
ரமேஷ் கிட்டி, “கிச்சா சுதீப் என்னிடம் ரூ.2 கோடி மோசடி செய்துவிட்டார். அதனாலேயே மிரட்டல் கடிதம் அனுப்பினேன்” என்று கூறியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.