ஆரம்ப காலத்தில் நாகேஷூக்கு சினிமா வாய்ப்புகளே கிடைக்கவில்லை. அப்போது பிரபலமாக இருந்த நடிகர் ஒருவர், நாகேஷின் நண்பர்.
அந்த நடிகர், தான் ஒப்பந்தமாகும் படங்களில் எல்லாம் “ இவர் நாகேஷ். அற்புதமான நடிகன்.. வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறுவார்.
வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர்,, தான் நடிக்கும் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களிடம், “எனது சம்பளத்தைக் குறைத்துக்கொள்கிறேன். நாகேஷூக்கு வாய்ப்பு கொடுங்கள்..” என்றார்.
அதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, “உங்களுக்கு வேண்டுமானால் சம்பளத்தை அதிகமாக தருகிறோம். இவருக்கு வாய்ப்பு தரமுடியாது” என்று கூறிவிடுவார்கள்.
பிறகுதான் ஒரு கட்டத்தில் நாகேஷுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.. ஜொலிக்க ஆரம்பித்தார்..
நாகேஷுக்காக தனது சம்பளத்தையே விட்டுக்கொடுக்க முனைந்த.. அந்த அற்புத நண்பர்.. நடிகர் யார்..