Thursday, April 11, 2024

“நன்றி மறந்த கவுண்டமணி!”: வருத்தப்பட்ட கங்கை அமரன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கங்கை அமரன் இயக்கிய  பெரும்பாலான படங்களில் கவுண்டமணி நிச்சயம் இருப்பார்.  கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், கோயில் காளை, ஊரு விட்டு ஊரு வந்து போன்ற படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்து அவரை நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், கவுண்டமணி குறித்து பழைய சம்பவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் கங்கை அமரன்.

“நான்  இயக்கி, தயாரித்த கோயில் காளை படத்திலும் கவுண்ட மணிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்தேன். பட தயாரிப்பின் போது பணப்பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தெரிந்துகொண்ட கவுண்டமணி  ‘பணத்தை கொடுத்தால் தான் டப்பிங் வருவேன்’ என்று  என் மேனேஜரிடம் சொல்லிவிட்டார்.   இதை  என்னிடம் நேரடியாக சொல்லவில்லை.

சிரமப்பட்டு பணம் புரட்டி சம்பளத்தைக் கொடுத்தேன்.  அவருக்கு பல படங்களில் வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தேன். அதை எல்லாம் மறந்து இந்த படத்திற்கு கொஞ்சம் கூட நன்றியை இல்லாமல் என்னை அசிங்கப்படுத்தி விட்டார்” என்று மிகவும் வருத்தத்துடன் கூறி இருக்கிறார் கங்கை அமரன்.

 

- Advertisement -

Read more

Local News