Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Movie Review – Touring Talkies https://touringtalkies.co Wed, 29 Nov 2023 17:14:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Movie Review – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘பார்க்கிங்’ சினிமா விமர்சனம் https://touringtalkies.co/parking-movie-review/ Thu, 30 Nov 2023 01:12:36 +0000 https://touringtalkies.co/?p=38390   ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பார்க்கிங். ஈகோ மோதல் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு எடுத்துகாட்டாய் ஒரு படம். ‘விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை’ என்ற கருத்தை விதைத்துள்ளது ‘பார்க்கிங். அரசாங்கப் பணியிலிருக்கிற பெரியவர் இளம்பரிதி மனைவி,மகள் என குடும்பத்துடன்  10 வருடங்களாக வசிக்கிறார். வாடகை வீட்டின் மாடி போர்சனில் காதல் மனைவியுடன் குடியேருகிறார் ஈஸ்வர். வந்தவர் புதிதாக கார் வாங்கிவந்து வீட்டு வளாகத்தில் நிறுத்த அது பைக் […]

The post ‘பார்க்கிங்’ சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
 

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பார்க்கிங்.

ஈகோ மோதல் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு எடுத்துகாட்டாய் ஒரு படம். ‘விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை’ என்ற கருத்தை விதைத்துள்ளது ‘பார்க்கிங்.

அரசாங்கப் பணியிலிருக்கிற பெரியவர் இளம்பரிதி மனைவி,மகள் என குடும்பத்துடன்  10 வருடங்களாக வசிக்கிறார். வாடகை வீட்டின் மாடி போர்சனில் காதல் மனைவியுடன் குடியேருகிறார் ஈஸ்வர். வந்தவர் புதிதாக கார் வாங்கிவந்து வீட்டு வளாகத்தில் நிறுத்த அது பைக் வைத்திருக்கும் பெரியவருக்கு இடைஞ்சலாகிறது. அதையடுத்து அவர், இளைஞனிடம் காரை வெளியில் நிறுத்தச் சொல்ல, அவன் முடியாது என்று மறுக்க இருவருக்குள்ளும் ஈகோ யுத்தம் துவங்குகிறது. அடிதடி, கார் கண்ணாடி உடைப்பு, போலீஸில் புகார் என அடுத்தடுத்த நாட்கள் ரணகளமாய் நகர்கிறது.

ஈஸ்வரை அவமானப்படுத்த, தண்டிக்க பெரியவர் தரை லோக்கலாக இறங்குகிறார். அவரை பழிவாங்க ஈஸ்வர் ஸ்மார்ட்டாக யோசிக்கிறார். பெரியவர் அதைவிட கிரிமினலாக யோசிக்கிறார். அதன் விளைவுகளும் விபரீதங்களுமே படத்தின் கதை. நாயகனாக  ஹரிஷ் கல்யாண் அழகான தோற்றத்துடன் இருக்கிறார். கார் பார்க்கிங் விஷயம் விவகாரமாகும்போது ஆக்ரோஷம் காட்டுவது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும்போது மனமுடைவது, பழிக்குப் பழிவாங்க களமிறங்குவது, மனைவியின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தன் மனதுக்கு சரியென பட்டதை செய்வது என காட்சிக்கு காட்சி வித்தியாசத்தை காட்டியுள்ளார்.

பாஸ்கருக்கு இதில் நெகடிவ் கேரக்டர். இளம்பரிதி என்ற பெயரில் வருகிறார். திருமண வயதில் பெண் இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என முகத்தில் காட்டும் வில்லத்தனம் அவர் ஏற்ற சைக்கோதனமான கேரக்டருக்கு முழுமையான உயிரோட்டம் கொடுத்துள்ளது.

 

ஹரீஷ் கல்யாணின் மனைவியாக, கர்ப்பிணிப் பெண்ணாக, தாய் தந்தையின் ஆதரவற்ற நிலையில் இந்துஜா. அவருக்கு கொடுத்த கதாப்பாத்திரத்துடன் கட்சிதமாக பொருந்துகிறார். கணவர், கீழ் வீட்டுக்காரர் என இரண்டு சைக்கோ பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு, வருகிற காட்சிகளிலெல்லாம் கண்கலங்க அனுதாபத்தை ஏற்படுத்துகிறார்.

 

நியாயமாக நடந்து கொள்ளும் ஹவுஸ் ஓனராக இளவரசு. மிகச்சில காட்சிகளில் வந்தாலும் அனுபவ நடிப்பு கவர்கிறது.

எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக ரமா, மகளாக பிரார்த்தனா மற்றும் உடன் நடித்திருப்பவர்கள் அனைவரும் திறமையான நடிப்பை வெளிப்படுத்துள்ளனர்.

 

கதையோட்டத்தை வலுப்படுத்தியிருக்கிறது சாம் சி எஸ் பின்னணி இசை.நகரத்தில் வாடகை வீட்டில் வசிக்கிற மக்கள் பலரும் சந்திக்கிற பார்க்கிங் பிரச்சனையை மையப்படுத்தி பாராட்டும் படி எளிமையாக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

The post ‘பார்க்கிங்’ சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: யாதும் ஊரே யாவரும் கேளிர்’ https://touringtalkies.co/movie-review-yaadhum-oore-yaavarum-kelir/ Wed, 17 May 2023 05:11:47 +0000 https://touringtalkies.co/?p=32544 நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நடிகர் விஜய் சேதுபதியின் “யாதும் ஊரே யாவரும் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் உருவாக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. மேலும்,  இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நாடு மறந்து, குடும்பம் துறந்து அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகும் மக்களின் […]

The post விமர்சனம்: யாதும் ஊரே யாவரும் கேளிர்’ appeared first on Touring Talkies.

]]>
நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நடிகர் விஜய் சேதுபதியின் “யாதும் ஊரே யாவரும்

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் உருவாக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

மேலும்,  இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

நாடு மறந்து, குடும்பம் துறந்து அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகும் மக்களின் வலிகளை நாம் உணரும்படி சொல்லியிருக்கும் படம்.

புனிதன் என்ற பெயரில் வலம் வரும் இலங்கை தமிழரான விஜய் சேதுபதி தன்னுடைய இலக்கை அடைய தனக்கென ஒரு குடிமகன் அடையாளம் வேண்டும் என நினைக்கிறார். ஆவணங்கள் படி அவர் “கிருபாநதி”யாக உருவெடுக்கிறார்.

அதேசமயம் காவல்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் மகிழ்திருமேனி, கிருபாநதியை கொல்ல நினைக்கிறார். இதற்கு காரணம் என்ன,  இலக்கை அடைய ஒரு அகதியாக விஜய் சேதுபதி என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்  என்பதே இப்படத்தின் கதை.

விஜய் சேதுபதி தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைருக்கும் உரிய அழுத்தம் கொடுத்து ஈர்க்கிறார் இயக்குநர்.

நிலம், நாடு, அரசியல் போன்றவற்றால் மக்கள் எவ்வாறு பிரிக்கப்படுகிறார்கள்,  அகதிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்,  அவர்களின் வலிகள், எதிர்பார்ப்புகள் என்ன என்பதை சொல்கிறது படம்.

காட்சி வழியில் மட்டுமின்று, உரைக்கும் வகையில் சூடான வசனங்களும் உண்டு.  குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மிகச்சிறப்பு!

மொத்தத்தில் அகதிகளாக வாழும் மக்களின் வாழ்க்கையின் வலிகளை சொன்ன ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரவேற்கத்தக்க படங்களில் ஒன்று..!

The post விமர்சனம்: யாதும் ஊரே யாவரும் கேளிர்’ appeared first on Touring Talkies.

]]>
விட்னஸ் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/witness-movie-review/ Sun, 11 Dec 2022 19:09:17 +0000 https://touringtalkies.co/?p=28433 ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’ என்ற பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து விவேக் குச்சிபோட்லா இந்தப் படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் தீபக். திரைக்கதை எழுதியவர்கள் முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா. படத் தொகுப்பு செய்திருப்பவர் பிலோமின் ராஜ். இசையமைப்பு […]

The post விட்னஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
தி பீப்பிள் மீடியா பேக்டரி’ என்ற பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து விவேக் குச்சிபோட்லா இந்தப் படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.

ஷ்ரத்தா ்ரீநாத், ரோகிணி, அழகம் பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் தீபக். திரைக்கதை எழுதியவர்கள் முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா. படத் தொகுப்பு செய்திருப்பவர் பிலோமின் ராஜ். இசையமைப்பு செய்திருப்பவர் இரமேஷ் தமிழ்மணி.

நாம் தினம்தோறும் கண்டும், காணாது, கடந்து போகும் சமூகத்தில் அடிமட்டத்தில் வாழும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைப் பேசுகிற படம் இது.

தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த ‘விட்னஸ்’ திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக இருக்கிறார் ரோகிணி. கணவரை இழந்த நிலையில் ஒரே மகனான பார்த்திபனை நன்றாகப் படிக்க வைத்து பெரிய அதிகாரியாக்க வேண்டும் என்று நினைத்து மகனுக்காகவே வாழ்ந்து வருகிறார் ரோகிணி.

இந்த நேரத்தில் பணக்காரர்களும், அதிகாரிகளும் வாழும் ஒரு அப்பார்மெண்டில் செப்டிக் டேங்கில் அடைப்பு ஏற்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில்  ரோகிணியின் மகனான பார்த்திபனை அந்த மலக் குழிக்குள்  இறங்கச் சொல்கிறார்கள். மறுக்கும் பார்த்திபன் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுகிறான். குழிக்குள் இறங்கிய பார்த்திபன் விஷ வாயு தாக்கி இறந்துவிட ரோகிணியின் ஒட்டு மொத்தக் கனவும் உடைகிறது.

தன் மகனுக்கு வந்த நிலை வேறு எவருக்கும் வரக் கூடாது என நினைக்கும் ரோகிணி கம்யூனிஸ்ட் தோழர்களோடு நின்று தனது மகன் மரணத்திற்கு நீதி கேட்டு நீதிப் போராட்டம் நடத்துகிறார்.

பெத்தராஜூ என்ற தொழிற் சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், பார்வதி என்ற இளம் கட்டடக் கலைஞர் ரோகிணியிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள். அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவு நீர்ப் பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கான பதிலடியாக, இந்திராணியின் வாழ்விலும், பார்வதியின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.  அந்த வழக்கு என்ன ஆனது.. ரோகிணிக்கு நீதி கிடைத்ததா..? என்பதுதான் மீதிக் கதை.

ரோகிணியின் கேரியரில் மிக முக்கியமான படம் இது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடை, உடை, பேச்சு என கடை நிலை தூய்மைப் பணியாளராகவே மாறி, இந்திராணி’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ரோகிணி.

மகனை இழந்து கதறுவது, மகனது மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடுவது, தன்னை தரக்குறைவாக நடத்தும் சூப்பர்வைசரிடம் கோபத்தைக் காட்டும் போதும், சம்பளம் தர மறுப்பதையெதிர்த்து  கொந்தளிப்பதுமாய் சில காட்சிகளில் அவரின் நடிப்புதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும் பலம்.

அதே அடுக்கு மாடி குடியிருப்புவாசிகளில் ஒருவராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த பார்த்திபனுக்கு நீதி கிடைக்க ரோகிணியுடன் இணைந்து போராடுகிறார். அந்தப் போராட்டக் களத்தில் தனது நடிப்பை கெத்தாக செய்திருக்கிறார் ஷ்ரத்தா..!

அரசு அதிகாரியாக அழகம் பெருமாள், வழக்கறிஞராக சண்முகராஜன், தொழிற் சங்கத் தலைவராக வருகிறவர்… அத்தனைப் பேரின் நடிப்பும் கச்சிதம்!

கதையின் முதன்மைப் பாத்திரத்தில் பார்த்திபனாக நடித்திருக்கும் இளைஞன் ஜி.செல்வாவின் இயல்பான நடிப்பும் ஈர்க்கிறது. நீதிமன்ற காட்சிகளில் பங்கு பெற்ற அனைவருமே எதார்த்தத்தை மீறாமல் நடித்துள்ளனர்

ரமேஷ் தமிழ்மணியின் இசையில் ‘பறவையாய் நாம் பறக்கிறோம்’ பாடல் மனதுக்கு இதமாக இருக்கிறது..! பின்னணி இசை இப்படத்திற்கு பெரியளவில் ஒத்துழைப்பை கொடுத்துள்ளது. படத்தை எழுதி இயக்கியிருக்கும் தீபக்தான் ஒளிப்பதிவும் செய்துள்ளார். தன் எழுத்தைத் தானே சரியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தில் ஆங்காங்கே பட்ஜெட் சிக்கனம் தெரிகிறது. இது விட்னஸுக்கு சின்ன மைனஸ்தான். என்றாலும், அதிகார வர்க்கத்தின் சமநிலை தவறினால் அவர்கள் கையில் எடுக்கும் வன்முறைகள் மிகப் பயங்கரமானதாக இருக்கும் என்பதை அழுத்தமாகப் பதிய வைத்ததில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் தீபக்.

மனிதரின் மலத்தை மனிதரே அல்லும் அவலத்திற்கு அரசு தடை விதித்திருந்தாலும், இப்போதும் மலக்குழிகளில் அப்பாவி மனிதர்கள் இறக்கப்பட்டு மாண்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அரசுகள்தான் முதல் காரணம் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் தீபக், அரசுகள் இதில் இரட்டை நிலையை எடுத்து நாடகமாடுவதையும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

நீதித் துறை மூலமாகப் போராடினால்கூட இறுதியில் வெற்றி பெறப் போவது அரசுகள்தான் என்பதை பட்டவர்த்தனமாய் உடைத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகவே தமிழ் சினிமாவில் இனி எல்லாக் காலங்களிலும் இந்தப் படம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.

RATING : 4 / 5

The post விட்னஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
குருமூர்த்தி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/gurumurthy-movie-review/ Sat, 10 Dec 2022 11:22:08 +0000 https://touringtalkies.co/?p=28360 நடிப்பு: நட்டி, பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா. தயாரிப்பு : பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய், இசை : சத்யதேவ் உதயசங்கர், ஒளிப்பதிவு : தேவராஜ், இயக்கம் : கே.பி.தனசசேகர். கோடீஸ்வரர் ராம்கி 5 கோடி ரூபாய் பணத்துடன் காரில் புறப்படுகிறார். வழியில் கடை யொன்றில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்க காரிலிருந்து இறங்கி செல்கிறார். […]

The post குருமூர்த்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நடிப்பு: நட்டி, பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா.

தயாரிப்பு : பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய், இசை : சத்யதேவ் உதயசங்கர், ஒளிப்பதிவு : தேவராஜ், இயக்கம் : கே.பி.தனசசேகர்.

கோடீஸ்வரர் ராம்கி 5 கோடி ரூபாய் பணத்துடன் காரில் புறப்படுகிறார். வழியில் கடை யொன்றில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்க காரிலிருந்து இறங்கி செல்கிறார். அப்போது காரிலிருக்கும் பணப் பெட்டியை திருடன் திருடி செல்கிறான்.

திருட்டு குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டியிடம் புகார் தருகிறார் ராம்கி. பணப் பெட்டியை தேடி எஸ்டேட் முழுவதும் நட்டியும் போலீஸ் டீமும் அலைகிறது. பெட்டி ஒவ்வொருவர் கை மாறி சென்று கொண்டே இருக்கிறது. பலரும் அந்த பணத்தை ஆட்டயை போட முயல்கின்றனர். கடைசியில் பணம் ராம்கிக்கு திரும்பி வருகிறதா. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்கு பிறகு ராம்கியை திரையில் பார்த்தாலும் அதே இளமை மாறாமலிருக்கிறார். ஆனால் அவருக்கு அதிகம் வேலையில்லை. பணத்தை பறி கொடுத்த பின் அவரது ஆன்மா பணப் பெட்டி எங்கெல்லாம் செல்கிறதோ அதன் பின்னாடி அலையும்போது இது பேய் கதையாக மாறுமோ என்ற சந்தேகம் எழுகிறது. நல்ல வேலையாக அப்படியெதுவும் நடக்கவில்லை.

நட்டி ஸ்டிரிக்ட்டான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் செய்யாமல் நியாயமான நடிப்பை வழங்கி கதாபாத்திரத்தை கச்சிதமாக நிறைவு செய்கிறார். ரவுடிகளுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார்.
மனைவி பூனம் பாஜ்வாவுடன் பாடல் காட்சியொன்றில் நெருக்கமாக நடித்து கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறார்.

போலீஸ் ஜீப் டிரைவராக வரும் ரவி மரியா, ஹெட்கான்ஸ்டபிள் மனோபாலா காமெடி அரட்டை அடிக்கின்றனர். ரவிமரியா பாத்திரத்தில் கொஞ்சம் வில்லத்தனமும் கலந்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. சஞ்சனா சிங், அஸ்மிதா கவர்ச்சி ஊறுகாய் பரிமாறுகின்றனர்.

கொடைக்கானல் எஸ்டேட்டை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்  தேவராஜ். சத்யதேவ் உதயசங்கரின் இசை பரவாயில்லை.

காமெடியுடன், ஒரு க்ரைம் கதையை கமர்ஷியல் மசாலா தடவி அளித்திருக்கிறார் இயக்குநர்  கே.பி.தனசசேகர்.

குரு மூர்த்தி – கமர்ஷியல்  காமெடி மசாலா

RATING : 2.5 / 5

The post குருமூர்த்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“கணிப்பு தப்பாச்சு!”: நடிகர் கதிர் https://touringtalkies.co/actor-kadir-new-movie/ Sun, 27 Nov 2022 12:08:00 +0000 https://touringtalkies.co/?p=27734 நடிகர் கதிர் சமீபத்திய வீடியோ ஒன்றில், “ஸாக் ஹாரீஸ் இயக்கத்தில், நட்டி, கயல் ஆனந்தி உள்ளிட்டோருடன் யூகி படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பாக்கியராஜ் கதை, புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு என முக்கியமானவர்கள் இணைந்து உள்ளனர். ஆனால் இயக்குநர் ஸாக், இந்த கதையைச் சொன்னபோது, எனக்குப் பிடிக்கவில்லை. இந்தக் கதை நமக்கு செட் ஆகாது என நினைத்தேன். அதையே அவரிடம் சொன்னேன். பிறகு அவர் விளக்கிய பிறகுதான், இது எனக்கான கதாபாத்திரம் என்பதை உணர்ந்தேன். இப்படி சில […]

The post “கணிப்பு தப்பாச்சு!”: நடிகர் கதிர் appeared first on Touring Talkies.

]]>

நடிகர் கதிர் சமீபத்திய வீடியோ ஒன்றில், “ஸாக் ஹாரீஸ் இயக்கத்தில், நட்டி, கயல் ஆனந்தி உள்ளிட்டோருடன் யூகி படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பாக்கியராஜ் கதை, புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு என முக்கியமானவர்கள் இணைந்து உள்ளனர்.

ஆனால் இயக்குநர் ஸாக், இந்த கதையைச் சொன்னபோது, எனக்குப் பிடிக்கவில்லை. இந்தக் கதை நமக்கு செட் ஆகாது என நினைத்தேன். அதையே அவரிடம் சொன்னேன். பிறகு அவர் விளக்கிய பிறகுதான், இது எனக்கான கதாபாத்திரம் என்பதை உணர்ந்தேன். இப்படி சில சமயங்களில் நமக்கான கணிப்பே தவறாகிவிடுகிறது. நல்லவேளையாக  இந்த பட வாய்ப்பை மிஸ் பண்ணாமல் இருந்தேன்..” என்றார்.

The post “கணிப்பு தப்பாச்சு!”: நடிகர் கதிர் appeared first on Touring Talkies.

]]>
ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/agent-kannayieram-movie-review/ Fri, 25 Nov 2022 13:06:49 +0000 https://touringtalkies.co/?p=27577 Labyrinth film productions நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. தெலுங்குலகின் முன்னணி இயக்குநரான அனுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம். இறந்தவர்களின் உடலை காசியில் எரித்தால் அவர்களுக்கு அடுத்த பிறவி இருக்காது என்ற நம்பிக்கை இந்தியாவில் இந்து […]

The post ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
Labyrinth film productions நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.

தெலுங்குலகின் முன்னணி இயக்குநரான அனுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம்.

இறந்தவர்களின் உடலை காசியில் எரித்தால் அவர்களுக்கு அடுத்த பிறவி இருக்காது என்ற நம்பிக்கை இந்தியாவில் இந்து மதத்தில் பரவலாக உள்ளது. இதன் அடிப்படையில் இறந்து போனவர்களின் சடலங்களை வாங்கி காசிக்குக் கொண்டு சென்று எரிக்கிறோம் என்று பொய் சொல்லி ஏமாற்றும் ஒரு கும்பல் அந்தப் பிணங்களின் கை ரேகைகளை வைத்து மக்களை ஏமாற்றி எப்படி குற்றங்கள் செய்கிறார்கள் என்பதையும் அதனை தனியார் டிடெக்டிவ் ஏஜெண்ட்டான ஹீரோ எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதையும் சொல்வதுதான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் கதை.

கோவை அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும், இந்துமதிக்கும் பிறந்தவர் சந்தானம்.  ஆனால் குடும்பச் சூழல் காரணமாக இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனாலும் இந்துமதியையும், மகனையும் தன் வீட்டிலேயே வேலைக்காரி என்று பொய் சொல்லி தங்க வைத்திருக்கிறார் ஜமீன்தார். அந்த வீட்டில் இருப்பதினால் சந்தானமும், அவரது தாயும் ஜமீன்தாரின் மனைவியின் மூலமாக பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். ஜமீந்தாரின் முதல் மனைவியும், அவரது மகன்களும் இவர்களை அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.

சிறு வயதில் இருந்தே, துப்பறிவதில் ஆர்வம் காட்டி வரும் சந்தானம், இளம் வாலிபனான பின்பு ஒரு துப்பறியும் ஏஜென்ஸியைத் துவக்கி நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் சந்தானத்திற்கு அதிர்ச்சியளிக்கும் தகவலாக அவருடைய அம்மாவின் மரண செய்தி வந்து சேர்கிறது.

கோயம்புத்தூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு புறப்படுகிறார் சந்தானம். ஊருக்குப் போவதற்குக்கூட கையில் காசு இல்லாமல், லாரியில் லிப்ட்டு கேட்டு ஒரு வழியாக ஊர் வந்து சேர்கிறார் சந்தானம்.

ஆனால், அதற்குள்ளாக அவரது தாயின் இறுதிச் சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டது. இதனால், கடைசியாக ஒரு முறை தாயைப் பார்க்க  முடியவில்லையே என்று பெரிதும் வருத்தப்படுகிறார் சந்தானம். 

இந்த நிலையில் சொத்துக்களை பங்கு பிரிப்பதற்காக அதே ஊரில் சில நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம் சந்தானத்திற்கு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அந்த ஊரில் சில மர்ம மரணங்கள் நிகழ்கின்றன. தொடர்ச்சியாக ரயில் தண்டவாளத்தின் ஓரமாக அனாதை பிணங்கள் கிடக்கின்றன. நடந்த கொலையை தற்கொலை என்று போலீஸ் சொல்கிறது.

நாயகி ரியா சுமன் ஆவணப் படம் எடுக்க சந்தானத்தின் கிராமத்திற்கு வருகிறார், அப்போது சந்தானத்துடன் நட்பு ஏற்பட, அனாதை பிணங்களின் பின்னணியை கண்டறிய சந்தானத்திற்கு உதவியாக இருக்கிறார். நடக்கும் இறப்புகளின் பின்னணி என்ன..? நடப்பவையெல்லாம், கொலைகளா..? தற்கொலைகளா..? என்று தனது டிடெக்டிவ் புத்தியைக் காட்டி கண்டறிய முயல்கிறார் சந்தானம். 

இதனால் போலீஸுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியால் ஒரு கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் சந்தானம் பிடிக்கப்பட்டு லாக்கப்பில் வைக்கப்படுகிறார். அப்போது அந்த லாக்கப்பில் இருந்த முனீஸ்காந்தின் சோகக் கதையைக் கேட்டு சந்தானம் ஏஜெண்ட் கண்ணாயிரமாக’ மாற கதை சூடு பிடிக்கிறது.

சந்தானம் அவருக்கு உதவும் முயற்சியில் இறங்க. அதனால் திடுக் திருப்பங்கள் ஏற்படுகிறது. முனீஸ்காந்த் சொல்லும் கதை என்ன..? இறுதியில் சந்தானம் டிடெக்டிவாக தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் திரைக்கதை.

ஒரு மெடிக்கல் மாஃபியா கும்பலைக் கண்டறியும் துப்பறிவாளனாக சந்தானம் நடித்திருக்கிறார். சந்தானம் தன்னுடைய வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு, சற்று சீரிஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாயை இழந்து வாடும் மகனாக, சமுதாயத்தில் அந்தஸ்து பெற துடிக்கும் இளைஞனாக சந்தானம் வரும் எமோஷனல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

தாய்க்கு இறுதி சடங்குகள் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியில் தூக்கமின்றி வாடும் காட்சிகள், நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் காட்சிகள், டிடெக்டிவாக சிலவற்றை சந்தானம் கண்டு பிடிக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்று தனக்கான நடிப்பில் சிறிதளவு நியாயம் செய்திருக்கிறார் சந்தானம். இருந்தாலும் சில இடங்களில் தன்னுடைய பேவரிட்டான கவுண்ட்டர் டயலாக்குகளை வீசியிருக்கிறார். அப்போதுதான் தியேட்டரில் கொஞ்சமேனும் சிரிப்பலை எழுகிறது.

சந்தானத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகை இந்துமதி தான் யார் என்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் கட்டத்திலும், அப்பாவாக நடித்துள்ள குரு சோமசுந்தரம் இந்துமதியை தன் மனைவி என்று சொல்ல முடியாத பரிதவிப்பிலும் உண்மையாக நடித்துள்ளனர்.

கதாநாயகியான ரியா சுமன் துணை நடிகை போலத்தான் இருக்கிறார். பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் அழகில்லாமல் ஏனோ, தானோவென்ற அலங்காரத்தில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். மேலும் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ், ஆதிரா உள்ளிட்டோரின் நடிப்பும் ஓகேதான். இதில் முனிஷ்காந்த் லாக்கப்பில் அழுது கொண்டே தனது மகளைக் காணவில்லை என்று கதறும் காட்சியில் இயக்குநரைக் காப்பாற்றியிருக்கிறார்.

தேனி ஈஸ்வர் மற்றும் சரவணனின் ஒளிப்பதிவில் குறையில்லைதான்ய. ஆனால் சில காட்சிகளில் ஒளிப்பதிவு செல்வதும், வருவதுமாக இருப்பதும், அதிகப்படியான காட்சிகளை இருட்டிலேயே எடுத்திருப்பதும் படத்தின் மிகப் பெரிய பேக் டிராப் என்றே சொல்ல வேண்டும்.

அஜய்யின் கத்திரிக்கோல் இன்னும் துல்லியமாக காட்சிகளை செதுக்கி கதையை புரியும் அளவுக்கு செய்திருக்கலாம். செய்யாதலால் படம் முடிந்து வரும்போது படத்தின் கதை என்று ரசிகர்களே கேட்கிறார்கள். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் தோராயமாக போட்டதுபோல இருக்கிறது.

இயக்குநர் மனோஜ் பீதாவின் இயக்கம் நமக்குப் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. திரைக்கதையில் விறுவிறுப்புக்கும் பஞ்சம். சுவாரஸ்யமும் இல்லை. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்’ அமையவில்லை.

நடிகர்கள் தேர்வும், படத்தின் கதையோட்டமும் சரியாக இருந்தாலும் அதையும் தாண்டிய எதோ ஒன்று படத்தில் இல்லாததால் படத்தோடு நம்மால் ஒன்றிணைய முடியவில்லை. டிடெக்டிவ் படங்களுக்கு உரிய விறுவிறுப்பும், சுவாரசியமும் படத்தில் இல்லை. படத்தின் காட்சி ஓட்டத்தையும், விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால் இயக்குநருக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கும்.

பொதுவாக சந்தானம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் அதுவே இல்லை என்பதால் அவரது ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. படத்தின் முதல் பாதியின் ஆமை வேகம் ரசிகர்களின் பொறுமையை சோதித்துவிட்டது என்றாலும் படம் இடைவேளையில் இருந்துதான் வேகம் பிடிக்கிறது. ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படிப்படியாக  இந்தக் குற்றங்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்றும் தெளிவில்லாமல் குழப்பமாய் முடிந்திருப்பது படத்தை மொத்தமாய் கவிழ்த்துவிட்டது.

ஒரு நல்ல படத்தை கையில் வைத்துக் கொண்டு, தமிழில் அதற்கான வெற்றி வாய்ப்பை மிக எளிதாகத் தவறவிட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

RATING : 2 / 5

The post ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
காரி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kaari-movie-review/ Fri, 25 Nov 2022 12:05:00 +0000 https://touringtalkies.co/?p=27574 ‘சர்தார்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லஷ்மண்குமார் தனது 5-வது படைப்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமாரும், கதாநாயகியாக மலையாள நடிகையான பார்வதி அருணும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடித்துள்ளார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் […]

The post காரி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
சர்தார்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லஷ்மண்குமார் தனது 5-வது படைப்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமாரும், கதாநாயகியாக மலையாள நடிகையான பார்வதி அருணும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடித்துள்ளார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார்.

இசை – டி.இமான், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, படத் தொகுப்பு – சிவ நந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அன்பறிவு, நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – A.பால் பாண்டியன், பத்திரிகை தொடர்பு – A. ஜான், எழுத்து, இயக்கம் – ஹேமந்த்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. உண்மையான நம்பிக்கையுடன் செயல்பட்டால் அது நிச்சயம் நடக்கும் என்கிறது இந்தப் படம். தனது கிராமத்தைக் காப்பாற்ற வேண்டி சென்னையிலிருந்து தன் சொந்த ஊருக்கு வரும் நாயகன் அதை செய்து முடித்தானா… இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ராமநாதபுரம் அருகேயிருக்கும் காரியூர் மற்றும் சிவனேந்தல் என்ற இரண்டு கிராமங்களுக்கும் இடையே பொதுவான கோயிலாக கருப்பன் கோயில் இருக்கிறது. பல்லாண்டு காலமாக மோதல் காரணமாக சாமி கும்பிடாமல் இருக்கும் இந்தக் கோவிலை இந்த வருடம் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

ஆனால், இந்தக் கோயில் நிர்வாகத்தை யார் நடத்தி, திருவிழாவை பொறுப்பேற்று நடத்துவது யார் என்ற மோதல் இரண்டு கிராமத்தினருக்கும் இடையில் மீண்டும் மோதல் வெடிக்கிறது. கடைசியில் இரு தரப்பினருக்கும் பொதுவாக 18 வகையான ஜல்லிக்கட்டு மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தி அதில் எந்த ஊர் ஜெயிக்கிறதோ அவர்களை கருப்பன் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடு்த்துக் கொள்ளலாம் என்று முடிவாகிறது.

போட்டிக்கான களம் சூடு பிடிக்கத் துவங்குகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்க, அதே காரியூரை பூர்விகமாக கொண்டவரான வெள்ளைச்சாமி சேர்வையைத் தேடி சென்னைக்கு வருகிறார்கள் ஊர்ப் பெரியவர்களான நாகி நீடுவும், வெள்ளைச்சாமி சேர்வையின் மைத்துனரும்.

சென்னையில் ஒரு சமூகப் போராளியாக, ஜீவகாருண்ய சங்கத்தின் முக்கியத் தளகர்த்தராகத் திகழும் ஆடுகளம் நரேனைத் தேடுகிறார்கள். இவர்கள் வந்த நேரம் நரேனின் மகனான சேது என்ற சசிகுமாருக்கும், அவருக்கும் இடையில் பிரச்சினை எழுந்து, தாங்க முடியாத மன வலியால் உயிரை விட்டுவிடுகிறார் நரேன். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளினால் சசிகுமார் தனது சொந்த ஊருக்கு வருகிறார்.

இங்கே வந்து பார்த்தால் ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும்.. கருப்பன் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும். மாநில அரசு அந்த ஊரை குப்பைக் கூளமாக்க நினைத்திருக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு வேலைகள் நாயகனுக்காக வரிசையாகக் காத்திருக்கின்றன.

இறுதியில் கோயில் நிர்வாகத்தை யார் கைப்பற்றியது..? சேது ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையை அடக்கினாரா..? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் இந்தக் ‘காரி’ படம்.

சசிகுமாரின் உடன் பிறந்த திறமையான மதுரைக்கார தமிழும், அந்த எளிமையான நடிப்பும் இந்தப் படத்திற்குப் போதுமானதாக இருந்தாலும், நடிப்புக்குப் போதாமையாகத்தான் இருக்கிறது.

சமூகப் போராளியான நரேனின் ஆர்ப்பாட்ட அட்டகாசத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் மகனாக பொங்கியெழுகிறார். நண்பனுக்காக உதவி செய்வது முக்கியமா… அல்லது முதலாளிக்கு விசுவாசமாக இருப்பது முக்கியமா என்று அப்பாவிடம் வாதிடுகிறார். நாயகியைப் பார்த்தவுடன் லவ்வாகி காதலை அரும்பாகி, மொட்டாகி, பூவாகி, துளிர்விட வைக்கிறார்.

பக்கத்து ஊர்க்காரர்களையும், அரசையும் வித்தியாசமான முறையில் ஏமாற்றி அந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தி ஜல்லிக்கட்டிலும் ஜெயித்துக் காட்டுகிறார். இப்படி ஒரு ஹீரோ என்னென்ன செய்வாரோ அனைத்தையும் செய்துவிட்டார் சசிகுமார். ஆனால் நடிப்பென்று பார்த்தால் வழமையானதுதான். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

படத்திலேயே நடித்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாகப் பாராட்ட வேண்டுமென்றால் அது நாயகி, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் மற்றும் ஆடுகளம் நரேன் மூவரின் நடிப்புதான்..! சிம்ப்ளி சூப்பர்ப்..!

மகளின் கல்யாணத்திற்காக மாட்டை விற்கப் போகுமிடத்தில் பாலாஜி சக்திவேல் காட்டும் நடிப்பு அசர வைக்கிறது. அவருடைய உடல் மொழியே பேசியிருக்கிறது. விற்றுவிட்டு வீட்டுக்கு வந்து மகளை சமாதானம் செய்ய முடியாமல் அவர் தவிக்கும்  தவிப்பு இன்னும் ஒரு படி மேலே கொண்டு போயுள்ளது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை.!

ஆடுகளம் நரேன் சுற்றுச் சூழல் போராளியாக.. சமூகப் போராளியாக தானே முன்னின்று போராடும் காட்சிகளில் தனித் திறமையைக் காட்டியிருக்கிறார். ஆனால் அவரது மேக்கப்புதான் உறுத்தலாக இருக்கிறது. அதேபோல் மகன் ரேஸ் பந்தயத்தில் தோல்வியடைந்த பின்பு அவர் காட்டும் ஆக்ரோஷம் அசத்தல்..!

நாயகியோ அறிமுகப் படம் என்பதால் அடக்கி வாசிக்காமல் எரிமலையாய் வெடித்திருக்கிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களைக் காட்டி ரசிகர்களைக் குளிர வைத்த கையோடு மாடு விற்பனையானது தெரிந்து கதறி, அழுது, கூப்பாடு போடும் காட்சியில் தனது நடிப்புத் திறனையும் வெளிக்காட்டியிருக்கிறார். நல்வரவுதான்..!

‘காரி’ என்ற அந்தக் காளையைக் காண்பித்திருக்கும்விதமே சூப்பர். அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி இருவரும் ஏதோ ஒப்புக்கு சப்பாணி போல நடித்துள்ளனர். வில்லனான ஜே.டி.சக்கரவர்த்தி தனது வில்லனத்தனத்தை மொத்தமாய் காண்பித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் கிளைமாக்ஸ் ஜல்லிக்கட்டு காட்சிகள் மிக அழகாய் படமாகியிருக்கிறது. புழுதி பறக்கும் ஆடுகளம்… சீறிப் பாயும் காளைகள், தூக்கி வீசப்படும் வீரர்கள்… என்று அது காட்டும் விஸ்தாரமான காட்சிகள் சற்றுப் பிரமிப்பைத் தருகின்றன. மேலும் அடிக்கடி காண்பிக்கப்படும் அந்தக் கிராமத்தின் ஏரியல் ஷாட்டுகள் அங்கேயே நம்மைத் தூக்கிச் செல்கின்றன. 

டி.இமானின் பின்னணி இசை ஜல்லிக்கட்டு போட்டிக்கு போர்க்களக் காட்சிக்கான விவரணையைக் கொடுத்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகமாக இல்லையென்றாலும் நமது காதுகளை அலற வைக்கவில்லை.

மெது, மெதுவாக நகர்ந்து கடைசியில் பேரலையாக வந்து மோதும் இந்தப் படத்தின் திரைக்கதை, இடையிடையே பல இடங்களை நோக்கி இலக்கில்லாமல் அலை பாய்ந்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறைபாடு.

மொத்தத்தில் இந்தக் ‘காரி’ படம், கிளைமாக்ஸில் காட்டிய வேகத்தை படத்தின் துவக்கம் முதலே காட்டியிருந்தால் இதைவிடவும் அதிகமான பாராட்டுக்களும், பெருமையும் இந்தப் படத்திற்குக் கொடுத்திருக்கும்.

இருந்தாலும் படத்தில் நாகி நீடு முன் வைக்கும் “எந்தவொரு நல்ல நோக்கத்தோடு வைக்கப்படும் நம்பிக்கையும் வீண் போகாது…” என்ற கருத்துக்காகவே இந்தப் படம் பாராட்டுக்குரிய திரைப்படமாகிறது..!

RATING : 3.5 / 5

The post காரி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/pattaththu-arasan-movie-review/ Fri, 25 Nov 2022 11:00:38 +0000 https://touringtalkies.co/?p=27571 கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ படம், அதே கபடி விளையாட்டில் நாம் இதுவரை அறிந்திருக்காத ஒரு முகத்தைக் காட்டுகிறது. இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தி, மீனாள், ஜானகி, சிந்து, […]

The post பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ படம், அதே கபடி விளையாட்டில் நாம் இதுவரை அறிந்திருக்காத ஒரு முகத்தைக் காட்டுகிறது.

இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தி, மீனாள், ஜானகி, சிந்து, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், துரை சுதாகர், சிங்கம் புலி, ராஜ் அய்யப்பா, பால சரவணன், ஜி.எம்.குமார், கன்னட நடிகர் காளே, தெலுங்கு நடிகர் சதுரு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இராமநாதபுரம் ஜில்லாவில் இருக்கும் காளையார்கோவில் கிராமத்தில் உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்து கொண்டாடும் அளவுக்கு மிகப் பெரிய கபடி வீரரான ராஜ்கிரண், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

அவருடைய மற்றொரு மனைவியின் பேரனான அதர்வாவும், அவரது அம்மா ராதிகாவும் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார்கள். சொத்துப் பிரச்சினையால் ராதிகாவையும், அதர்வாவையும் ராஜ்கிரணும் அவரது குடும்பத்தாரும் ஒதுக்கி வைத்துள்ளனர். தனது தாய் ராதிகாவின் எதிர்ப்பையும் மீறி அதர்வா மட்டும் எப்படியாவது தாத்தா குடும்பத்துடன் சேர்ந்துவிட வேண்டும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறார்.

இதற்கிடையே ராஜ்கிரணின் மற்றொரு பேரனும், ராஜ்கிரணின் பால்ய காலத்து தோழனும், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவருமான ரவி காளேவின் மகனும் ஒன்றாக அதே ஊரின் கபடி டீமில் இடம் பெற்று விளையாடி வருகிறார்கள். ராஜ்கிரணின் பேரன் மட்டும் தமிழக கபடி டீமிற்கு தேர்வாகிவிட்டதை தெரிந்து கொண்ட காளேவின் மகன் தந்திரமாக சிலவைகளை செய்து ராஜ்கிரணின் பேரனை சிக்கலுக்கு உள்ளாக்குகிறான்.

இப்போது ஊரே கொண்டாடிய ராஜ்கிரணின் குடும்பம் ஊருக்கு துரோகம் செய்துவிட்டதாக பழி சுமத்தி அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் ஊருக்கான கபடி அணியில் விளையாட கூடாது என்று தடையும் விதிக்கிறார்கள்.

இப்போது கபடி விளையாடவே தெரியாத அதர்வா தன் தாத்தா குடும்பத்தின் மீது விழுந்த பழியை போக்க களத்தில் இறங்குகிறார். கபடி விளையாட்டில் தன் ஊர் அணியை தன் குடும்ப அணி வெல்லும் என்று சவால்விட்டு பிரிந்த, குடும்பத்தை ஒன்று சேர்த்து ஊர் அணிக்கு எதிராக கபடி விளையாடத் தயாராகிறார் அதர்வா.

அந்தச் சவாலில் ராஜ்கிரணின் குடும்பம் வெற்றி பெற்றதா..? இல்லையா? என்பதை விறுவிறுப்பான கபடி விளையாட்டோடு, குடும்ப செண்டிமெண்டையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

கபடி வீரராக நடித்திருக்கும் அதர்வா விளையாட்டு வீரருக்கான வேடத்தில் வழக்கம்போல கச்சிதமாக பொருந்துகிறார். கபடி களத்தில் காளையாக பாய்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். காதல் காட்சிகளில் ரசிக்கும்படி அளவாக நடித்தும், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் கவரவும் வைக்கிறார். 

அதர்வாவுக்கு தாத்தாவாக, கதையின் உண்மையான நாயகனாக பொத்தாரி’ என்ற கபடி வீரரின் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், மூன்றுவிதமான கெட்டப்புகளில் தனது வித்தியாசத்தை நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். 70 வயதில் ஒருவரால் கபடி விளையாட முடியுமா என்ற கேள்விக்குத் திரையில் கபடி விளையாடியே காண்பித்திருக்கிறார் ராஜ்கிரண்.

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத்திற்கு குடும்ப பாங்கான முகம். கபடி வீராங்கனையாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பு மூலம் ஜொலித்திருக்கிறார். நாயகி தொடை தெரியும் அளவுக்கு உடையணிந்திருப்பது சற்குணத்தின் இயக்கத்தில் இதுதான் முதல் படமாகும்.

ராஜ்கிரணின் மூத்த மகனாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், அதர்வாவிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், மகனை இழந்த ஆற்றாமையில் தவிக்கும் காட்சிகளிலும், இறுதியில் நிலைமை புரிந்து அதர்வாவுடன் இணைந்து கபடியில் மல்லுக்கட்டும் காட்சியிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

ராஜ்கிரணின் இளைய மகனான துரை சுதாகரும் தன் பங்குக்கு உரிய நடிப்பினை காண்பித்திருக்கிறார். சிங்கம் புலி வீட்டு மாப்பிள்ளையாக வலம் வந்தாலும் கிடைக்கும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.

ராஜ்கிரணின் மற்றொரு பேரனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் நடிப்பிலும், கபடி விளையாட்டிலும் சரி பாராட்டும்படி நடித்திருக்கிறார். ராதிகா தன் பங்குக்குத் தனது தனித் திறமையை பதிவு செய்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ரவி காளே, பால சரவணன் என்று பலரும் தங்களது கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்து முடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்தில் லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. விளையாட்டு போட்டிகளை விறுவிறுப்பாக காட்டுவது மட்டுமல்ல.. பல்வேறு வயதுகளில் இருக்கும் தாத்தா, மகன், பேரன் என்று மூன்று தலைமுறையினர் கொண்ட ஒரு குடும்ப அணி கபடி விளையாடுவதை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் கேமிரா அந்த வெற்றிலை கொடி தோட்டத்திற்குள் நுழைந்து பயணிக்கும் காட்சியை இதுவரையிலும் தமிழ்த் திரை ரசிகர்கள் கண்டதில்லை. அவ்வளவு அழகுடன் அதைப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பொதுவாக சற்குணத்தின் படமென்றால் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சிறப்பாகத்தான் இருக்கும். இந்தப் படத்திலும் அதுவே நடந்திருக்கிறது. பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும்படி இருப்பதோடு, முணுமுணுக்கவும் வைக்கிறது. இன்னொரு பக்கம் பின்னணி இசை படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப செண்டிமெண்டோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சற்குணம், அதை முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருக்கிறார்.

அதிகப்படியான பெரிய நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கிராமத்து, குடும்பக் கதையை சொல்வதே மிகப் பெரிய சவால் என்றாலும், அந்த சவாலை சாமர்த்தியமாக சமாளித்திருக்கும் இயக்குநர் சற்குணம், காதல், ஆக்‌ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்து அளவாகவே கொடுத்திருக்கிறார்.

ஒட்டு மொத்தமாய் இன்றைய இளைஞர்களுக்கான படமாக மட்டுமின்றி, குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ‘பாசமலர்’ டைப் படமாகவும் இந்தப் ‘பட்டத்து அரசன்’ அமைந்துள்ளது.

RATING : 3.5 / 5

The post பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/naan-mirugamaai-maara-movie-review/ Tue, 22 Nov 2022 18:34:39 +0000 https://touringtalkies.co/?p=27465 ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. சினிமாவில் சவுண்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார் ‘பூமிநாதன்’ என்ற சசிகுமார். இவரது தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் சட்டப்படி தண்டனை வாங்கித் தருவது நீதிமன்ற வழக்கப்படி முடியாது என்பதை உணரும் சசிகுமார், சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்து அவர்களைப் பழி வாங்குகிறார். இவர் செய்த பதிலடியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர் ஆபத்துகள் ஏற்படுகின்றன. […]

The post நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

சினிமாவில் சவுண்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார் பூமிநாதன்’ என்ற சசிகுமார். இவரது தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் சட்டப்படி தண்டனை வாங்கித் தருவது நீதிமன்ற வழக்கப்படி முடியாது என்பதை உணரும் சசிகுமார், சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்து அவர்களைப் பழி வாங்குகிறார்.

இவர் செய்த பதிலடியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர் ஆபத்துகள் ஏற்படுகின்றன. யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து செய்த படுகொலைகளுக்கு சாட்சிகள் இருப்பதாகச் சொல்லும் புதிய வில்லன், சசிகுமாருக்கு புதிய அஸைண்மெண்ட்டை கொடுக்கிறான். அவன் சொன்னதை செய்யவில்லையென்றால் சசிகுமாரின் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறான்.  

செய்வதறியாமல் தவிக்கும் சசிகுமார் வில்லனுக்கும், தன் குடும்பத்துக்கும் நடுவில் மாட்டிக் கொள்கிறார். இனி அவர் என்ன செய்கிறார்..? தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா..? இல்லையா..? என்பதை ரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்கிறது இந்த ‘நான் மிருகமாய் மாற’ படம்.

சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களில் இந்த அளவுக்கு ரத்தம் சிதறியது இந்தப் படத்தில்தான் இருக்கும். சசிகுமாரின் முதல் படமான சுப்ரமணியபுர’த்தில் நடந்த ரத்தச் சிதறல்களையும் இந்தப் படம் தாண்டிவிட்டது.

அழுகை, கோபம், இயலாமை, சோகம், பதற்றம் என்ற பல்வேறு உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய நடிப்பைத் தன்னால் முடிந்த அளவு காண்பித்திருக்கிறார் சசிகுமார். சசிகுமாரை மிக அதிகக் காட்சிகளில் அழுக வைத்திருப்பதும் இந்தப் படம்தான். சிரிப்பே இல்லாமல் சசிகுமார் தனது சோக முகத்தை வைத்தே கடைசிவரையிலும் படுகொலைகளைச் செய்கிறார்.

சசிகுமார் மட்டுமல்ல.. அவருடன் நடித்திருக்கும் அனைவருமே தங்களது சோகத்தை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்தி நம்மையும் கதற வைக்கிறார்கள். ஹரிபிரியாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் சில நிமிடங்களுக்கு பார்வையாளர்களுக்கு இளைப்பாற்றலை தந்தாலும் 90 சதவிகிதம் அழுவாச்சி காவியமாக இந்தப் படம் மாறியிருக்கிறது.

அடிக்கடி, ‘டேய் உன்ன வெட்டிக் கொன்றுவேன்டா’ என்று பலரிடமும் கத்துகிறார் சசிகுமார். இந்த வசனத்தையாவது காட்சிக்குக் காட்சி மாற்றியிருந்தால் கேட்பதற்காகவாவது நன்றாக இருந்திருக்கும்.

இடைவேளைக்கு முன்புதான் விக்ராந்த் கதைக்குள்ளேயே வருகிறார். இவரது வருகை படத்தின் திரைக்கதையில் வேகத்தையும், திருப்பத்தையும் கொடுக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. போதாக்குறைக்கு இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பின்னணிக் குரலிலும் மிடுக்கும், தைரியமும்  இல்லாமல் போக.. சுமாராகிப் போனது இவரது கேரக்டர்.

நேரடியாகக் களத்தில் இறங்கி அடித்து ஆடியிருக்க வேண்டிய விக்ராந்தை, சும்மா நிக்க வைத்து.. நடக்க வைத்து.. போனிலேயே பேச வைத்து கதையை முடித்திருக்கிறார்கள். இன்னொரு வில்லனாக வரும் அப்பானி சரத் முதல் பாதியில் சிறிது வில்லத்தனத்தை செய்திருக்கிறார். ஆனால் பின் பாதியில் இவரும் காணாமல் போய்விட்டார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளதால், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜியின் திறமைக்கு நல்ல வேலை கொடுத்துள்ளார் இயக்குநர். அந்த வகையில் நமது கண்களுக்கு ஈறு விளைவிக்காமல் சமர்த்தாக இருக்கிறது ஒளிப்பதிவு. இது போன்ற திரில்லர் படங்களுக்கு மிகப் பெரிய துணையே பின்னணி இசைதான். இந்தப் படத்தில் ஜிப்ரான் இதை முழுமையாகச் செய்யாததால் அதுவும் வீணாகிவிட்டது.

படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள்வரையிலும் பரபரப்பாக ஓடிய திரைக்கதை பின்பு கொஞ்சம், கொஞ்சமாக அமுங்கிவிட்டது. ரத்தச் சகதியை இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் நம் மனசுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். சவுண்டு இன்ஜினியர் என்ற கேரக்டர் ஸ்கெட்ச் கொண்ட கதையிலேயே சவுண்ட் டிஸைனிங் சுமார் என்றால் எப்படிங்கோ..? சிலர் பேசும்போது டப்பிங்கில் சின்க் ஆகாமல் போகிறது. தேவையற்ற நேரங்களில், தேவையற்ற ஒலி ஊடுறுவியிருக்கிறது. டெக்னிக்கல் சைடில் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

தம்பிக்காக 6 கொலைகளை செய்யத் துணியும் சசிகுமாருக்கு அந்தத் தம்பியுடனான நட்பும், பாசமும், அன்பும் எப்படியிருந்தது என்பதைக் காட்ட ஒரு காட்சியும் இல்லாததால் சசிகுமாரின் சோகத்தில் ரசிகர்களாலும் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே ஏதோ கத்தியை எடுத்தார். வீராவேசமாக எதிரிகளின் கோட்டைக்குள் நுழைந்து வெட்டு, குத்து என்று அத்தனை பேரையும் சம்ஹாரம் செய்துவிட்டு சத்தமில்லாமல் வீட்டுக்கு வந்து குளியலைப் போட்டுவிட்டு அமர்வதையெல்லாம் நாம் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சசிகுமார் ஒலிப்பதிவு பொறியாளர் என்பதால் வில்லன் பேசும் ஆடியோவை வைத்து அவன் இருக்கும் ஏரியாவையும், சுற்றுச் சூழலையும் கண்டறியுவிதம் சிறப்பாகத்தான் உள்ளது என்றாலும் இதுவும் கொலை செய்யவே உதவுகிறது என்பதால் இதுக்குத்தான் அதுவா என்று நமக்கு அயர்ச்சிதான் ஏற்படுகிறது.

விக்ராந்த், சசிகுமாருக்குத் தரும் கொலை அசைண்மெண்ட்டை ஏற்று மருத்துவமனையில் மதுசூதனனை கொலை செய்ய முயற்சிக்கும் அத்தருணம் சற்று படபடப்பையும், பரபரப்பையும் நமக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால், படம் முழுவதும் இந்த உணர்வைக் கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே..!?

அதீத வன்முறை.. ரத்தச் சிதறல்.. பழி வாங்கும் உணர்வு, தேடுதல் வேட்டை.. என்று பயங்கர பரபரப்புக்கு தேவையான அத்தனையையும் வைத்துக் கொண்டு இதை குடும்ப சென்டிமெண்ட்டுக்குள் அடக்கப் பார்த்த இயக்குநர், கடைசியாக தோல்வியைத்தான் தழுவியுள்ளார்.

இது வன்முறையின் உச்சக்கட்டமாக மட்டுமே காட்சியளிக்கிறது..!!!

RATING :  2 / 5

The post நான் மிருகமாய் மாற – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
யூகி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/yuki-movie-review/ Tue, 22 Nov 2022 18:27:25 +0000 https://touringtalkies.co/?p=27459 வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘கார்த்திகா’ என்ற கயல் ஆனந்தி பட்டப் பகலில் கார் மூலமாகக் கடத்தப்படுகிறார். அவரைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் நரேனிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் டி.எஸ்.பி.யான பிரதாப் போத்தன். பிரதாப் போத்தன் சொன்னதாகச் சொல்லி இவர்களுடன் இணைகிறார் சப்-இன்ஸ்பெக்டர் கதிர். இன்னொரு பக்கம் பிரபல நடிகரான ஜான் விஜய், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் ஒரு […]

The post யூகி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘கார்த்திகா’ என்ற கயல் ஆனந்தி பட்டப் பகலில் கார் மூலமாகக் கடத்தப்படுகிறார். அவரைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் நரேனிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் டி.எஸ்.பி.யான பிரதாப் போத்தன். பிரதாப் போத்தன் சொன்னதாகச் சொல்லி இவர்களுடன் இணைகிறார் சப்-இன்ஸ்பெக்டர் கதிர்.

இன்னொரு பக்கம் பிரபல நடிகரான ஜான் விஜய், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருந்து வருகிறது.  

தனது உதவியாளர்களுடன் இணைந்து ஆனந்தியைத் தேடத் துவங்குகிறார் நரேன். இந்தத் தேடுதல் வேட்டையின் முடிச்சுக்கள் அவிழ.. அவிழ.. இந்தக் களத்திற்குள் நிற்கும் யாருமே உண்மையாளர்கள் இல்லை. அனைவருமே போலிகள் என்பது காட்சிக்குக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக நிரூபணமாகிறது.  

கார்த்திகா யார்? கார்த்திகாவின் கணவன் யார்? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? பிரதாப் போத்தன் கண்டு பிடிக்க சொல்லும் பெண் யார்? சிலை கடத்தலில் ஈடுபட்ட வழக்கைத் தீர்த்தது யார்? ஜான் விஜய் எதற்காக கொல்லப்பட்டார்? இந்த எல்லா கேள்விகளுக்குமான விடைதான் இந்த யூகி’ படம்.

துப்பறியும் நிபுணரான நரேனை சுற்றித்தான் மொத்தத் திரைக்கதையும் நகர்கிறது. தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் அவர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதும், பார்வையாலேயே குற்றங்களை அளவெடுப்பதும், கதிரை கண்காணிப்பிலேயே வைத்திருக்க அவர் எடுக்கும் அவசர ஸ்டண்ட்களும், தனது சக ஊழியர்களிடையேகூட உண்மையாக நடந்ததை மறைத்துவிட்டு கதையைத் திருப்பவதுமாய் ஒரு அழுத்தமான நடிகராய் திரையில் வலம் வருகிறார் நரேன்.

சாமி சரணம் என்று சொன்னபடியே கொலை செய்யக்கூட தயங்காத நடிப்பைக் காண்பித்திருக்கிறார் நட்டி நட்ராஜ். இவருக்கான பின்புலக் காட்சிகள் அழுத்தமாய் இல்லாதது மட்டும்தான் ஒரேயொரு குறை. முதல் பாதியில் கதிருக்கு அதிக வேலையில்லை என்றாலும், போகப் போக அவரால்தான் கதையே நகர்கிறது. தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு நேர் வழியில் சென்றால் நீதி கிடைக்காது என்று நினைத்து புத்திசாலித்தனமாய் செயல்பட்டு நீதியை நிலைநாட்டும் அந்தக் கதாபாத்திரத்திற்கு கதிர் சாலப்பொருத்தம்தான்.

எப்போதும் இறுகிய முகம்.. பதட்டப்படாத குணம்.. காரியத்தில் முனைப்பு.. செய்து காட்டுவதில் திறமை என்று தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை உணர்த்தியிருக்கிறார் கதிர். பவித்ரா லட்சுமி ஒரு பரிதாபமான கதாப்பாத்திரத்தில் உயிராய், உணர்வாய் நடித்திருக்கிறார். உண்மை தெரியும்போது நம்மால் பாவப்படத்தான் முடிகிறது.

கார்த்திகாவாக வரும் ஆனந்தியின் நடிப்புதான் படத்தில் ரசிகர்களை கொஞ்சம் ஒன்றிப் போக வைக்கிறது. இயலாமையின் காரணமாய் வாடகைத் தாய் விஷயத்துக்கு ஒத்துக் கொண்டு பின்பு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அந்தப் பரிதவிப்பை நடிப்பில் அழகாய் காட்டியிருக்கிறார் ஆனந்தி. பாராட்டுக்கள்.

ஜான் விஜய் வழக்கம்போல தெனாவெட்டு கேரக்டரை அலட்சியமாகச் செய்து பரிதாபமாய் செத்துப் போகிறார். வாடகை தாய் முறைக்கு புரோக்கர் வேலை பார்க்கும் மருத்துவராக வினோதினியும் தன் பங்குக்கு விஷம் தடவிய நடிப்பைக் காண்பித்து ஸ்கோர் செய்திருக்கிறார். பிரதாப் போத்தன் நடித்து வெளிவந்திருக்கும் கடைசி படம் இது. அந்த ஒரு பெருமையை மட்டுமே பிரதாப்பிற்கு இந்தப் படம் கொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கேமிரா நல்லதும் செய்யவில்லை. கெடுதலும் செய்யவில்லை. படத்தையும் டிஸ்டர்ப் செய்யாமல் ரசிக்க வைத்திருக்கிறது. இது போதும் எனலாம். பாடலுக்கான ரஞ்சின் ராஜின் இசை மென்மையைக் கூட்டியிருக்கிறது. டான் வின்சென்ட்டின் பின்னணி இசை படத்தின் திகில், சஸ்பென்ஸ் உணர்வை கடக்க வைத்திருக்கிறது.

சமீப நாட்களில் பிரபலமாகியிருக்கும் வாடகைத் தாய் விவகாரத்தில் மறைந்திருக்கும் சில விஷயங்களை இந்தப் படம் நேர்மையாகப் பேசியிருக்கிறது. பிள்ளை பெற்றுக் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ள தம்பதிகள் பிள்ளைப் பேறு காலத்திலேயே பிரிந்து போனால் அந்தப் பிள்ளைக்கு யார் பொறுப்பு.. அந்த வாடகைத் தாயை யார் கவனித்துக் கொள்வது.. இது போன்ற இந்த விஷயத்தில் மறைந்திருக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படம் எடுத்துக் காட்டியிருப்பது நல்ல விஷயம்தான்..!

கொஞ்சம் பிகசினாலும் கதை புரியாமற்போய்விடும் அபாயம் உள்ள இந்தக் கதையை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் இயக்குநரின் திரைக்கதை திறமைக்கும், சஸ்பென்ஸ் உடைந்துவிடாமல் கடைசிவரையிலும் கொண்டுபோயிருக்கும் விதத்திற்கும், நடிகர், நடிகைகளை அழுத்தமாக அந்தக் கேரக்டராகவே வாழ்வதுபோல நடிக்க வைத்திருக்கும் இயக்கத் திறமைக்காகவும் மனதாரப் பாராட்டுகிறோம். வாழ்த்துகள்.

சிறந்த திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புவர்களுக்கேற்ற படம் இது..!

RATING : 4.5 / 5

The post யூகி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>