The post “மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>நடிகரும், தயாரிப்பாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்றைய சுப முகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9:30 மணிக்கு தமிழக அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று காலை நடைபெற்றது. உதயநிதிக்கு கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‛‛தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்றுவதே எனது லட்சியம். என் மீது வரும் விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமான என்னுடைய செயல்களால் மட்டுமே பதில் சொல்லுவேன். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘மாமன்னன்’ படமே எனது கடைசி திரைப்படம். இனி படங்களில் நடிக்க மாட்டேன். கமல் ஸார் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து விலகிவிட்டேன். அவரிடமும் அதை தெரிவித்துவிட்டேன். அவரும் ஏற்றுக் கொண்டார்…” என்றார் உதயநிதி.
The post “மாமன்னன் படமே எனது கடைசி படம்” – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post ரெஜினா கேஸண்ட்ராவும் காதலில் விழுந்தாரா…? appeared first on Touring Talkies.
]]>தெலுங்குலகில் தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரெஜினா. இவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் தரமான கதையை தேர்வு செய்து இவர் கம் பேக் கொடுத்த ‘மாநகரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ரெஜினா தற்போது ‘மாநகரம்’ பட நடிகரான சந்தீப் கிஷனின் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதாக கிசுகிசு எழுந்துள்ளது.
ரெஜினா கேஸண்ட்ராவின் பிறந்த தினத்திற்கு ‘மாநகரம்’ பட நடிகரான சந்தீப் கிஷன் இவரை வாழ்த்தி போட்டிருந்த பிறந்த நாள் வாழ்த்துதான் இந்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இவர்கள் தற்போது டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்களா? என்கிற சந்தேகத்தையும் எழ வைத்துள்ளது.
சந்தீப் கிஷன் தன்னுடைய வாழ்த்தில் “ஹாப்பி பர்த்டே பாப்பா… லவ் யூ.. நீ எப்போதும் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்சியாக இரு கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்…” என்று கூறியிருக்கிறார். மேலும் இருவரும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
The post ரெஜினா கேஸண்ட்ராவும் காதலில் விழுந்தாரா…? appeared first on Touring Talkies.
]]>The post “சந்தானமும், நானும் சிவன் கோவில்கள் பற்றி நிறைய பேசுவோம்” – சொல்கிறார் நடிகை ரியா சுமன் appeared first on Touring Talkies.
]]>சந்தானம் பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், “சந்தானம் ரொம்ப ஜோவியல். ரொம்பவும் ப்ரெண்ட்லி நேச்சர் பெர்ஸன். எப்பவும் ஜோக் அடிச்சுக்கிட்டேயிருப்பார். இல்லாட்டி கவுண்ட்டர் கொடுத்துக்கிட்டேயிருப்பார். காமெடியைத் தாண்டி சந்தானம் ஸாரிடம் சீரியஸ் பக்கமும் இருக்கு. ரொம்ப நல்லா அப்சர்வேஷன் பண்ணுவார். சொல்லப் போனா அவரோட காமெடி ரகசியமே அதுதான். அவர் மற்றவங்களைப் பண்ற அப்சர்வேஷன்ல இருந்துதான் அவரோட காமெடியே வருதுன்னு நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேருமே சிவன் பக்தர்கள் என்பதால் சிவனைப் பற்றியும், சிவாலயங்கள் பற்றியும் நிறைய பேசினோம்..” என்கிறார் ரியா சுமன்.
The post “சந்தானமும், நானும் சிவன் கோவில்கள் பற்றி நிறைய பேசுவோம்” – சொல்கிறார் நடிகை ரியா சுமன் appeared first on Touring Talkies.
]]>The post “ஆக்சன்னு சொல்லிட்டா ‘பீம ராஜா’ மாதிரி ஆயிருவாரு செல்வராகவன்” – நட்டி நட்ராஜின் ஆச்சரியம்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் ஒரு விஷயத்தைத் தேடி நாங்கள் இருவரும் வெவ்வேறு வழிகள்ல டிராவல் செய்வோம். அதனால் எனக்கும், அவருக்கும் குறைந்த காம்பினேஷன் காட்சிகள்தான் இருந்தன. ஸ்பாட்ல சாதாரணமாத்தான் நின்னு பேசிட்டிருப்பார். ஆனா ரோல், கேமிரா, ஆக்சன்னு சொல்லிட்டா போதும் அப்படியே பீமராஜா மாதிரி ஆயிருவார்.
ஒவ்வொரு காட்சிலேயும் அவர் நடிச்சு முடிச்சதும் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். அவர் என்னைப் பார்த்து லைட்டா சிரிப்பார். அவர்கிட்ட இந்த அளவுக்கு பர்பார்மென்ஸ் இருக்குறதுனாலதான் அவர் இயக்கத்துல நடிக்கிறவங்ககிட்ட ஈஸியா வேலை வாங்க முடியுதுன்னு நினைக்கிறேன்..” என்றார் நடிகர் நட்டி நட்ராஜ்.
The post “ஆக்சன்னு சொல்லிட்டா ‘பீம ராஜா’ மாதிரி ஆயிருவாரு செல்வராகவன்” – நட்டி நட்ராஜின் ஆச்சரியம்..! appeared first on Touring Talkies.
]]>The post “ஹீரோவா நடிக்க வைக்க 20 லட்சம் கேட்டாங்க” – நடிகர் பிரஜினின் திடுக்கிடும் புகார் appeared first on Touring Talkies.
]]>இது குறித்து நடிகர் ப்ரஜின் பேசும்போது, “நான் ஆங்கரா இருந்தபோது இயக்குநர் சசி தன்னோட டிஷ்யூம் படத்துல சின்ன ரோல்ல நடிக்கக் கேட்டார். ஆனா எனக்கு ஹீரோவா நடிக்கணும்னுதான் ஆசைன்னு அவர்கிட்டயே சொன்னேன். ஆனாலும் அவர் வற்புறுத்தியதால் அந்தப் படத்தில் நடித்தேன். அஞ்சு, ஆறு சீன் என்றாலும் அந்த சீன்களெல்லாம் எடிட்டிங்ல கட் ஆகாமல் அப்படியே திரைக்கு வந்தது.
ஆனால் நான் ஹீரோவா நடிச்ச முதல் படமே பாதில டிராப் ஆயிருச்சு. என்ன காரணம்ன்னா அந்தப் படத்தோட பத்து நாள் ஷூட்டிங் முடிஞ்சவுடனேயே என்கிட்ட தயாரிப்பு தரப்புல 20 லட்சம் ரூபா பணம் கேட்டாங்க. என்கிட்ட அவ்ளோ பணில்லை. இருந்தா நானே தயாரிச்சிருப்பனேன்னு சொன்னேன். ஆனா அவங்களோ பணம் கொடுத்தால்தான் ஹீரோ ஆக முடியும்ன்னு சொன்னாங்க. அப்படியில்லங்க. திறமையிருந்தாலே ஹீரோ ஆயிரலாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்புறம் அதுல இருந்து மீண்டு இப்போ இதுவரைக்கும் தமிழ், மலையாளம்ன்னு 24 படங்கள்ல நடிச்சிட்டேன்…” என்றார்.
The post “ஹீரோவா நடிக்க வைக்க 20 லட்சம் கேட்டாங்க” – நடிகர் பிரஜினின் திடுக்கிடும் புகார் appeared first on Touring Talkies.
]]>The post விழா மேடையில் இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை..! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது “தன்னை மதிக்காமல் கதாநாயகி என்று அங்கீகாரம் கொடுக்கவில்லை” என்று நடிகை சாய் பிரியா மேடையில் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
சாய் பிரியா மேடையில் பேசும்போது இயக்குநரைப் பார்த்து, “இந்தப் படத்தில் என்னை ஹீரோயின்னு சொல்லித்தான ஸார் என்னை கமிட் செய்தீர்கள். மல்லிகா மேடம் அரசியா நடிச்சாங்க. நான் இளவரசியா நடிச்சிருக்கேன். ஆனாலும் என்னை நீங்க ஏன் கார்னர் செய்றீங்கன்னு எனக்குத் தெரியவில்லை. பெயர் போடும் இடத்தில் என் பெயர் காணாமல் போயுள்ளது. இதை நான் யாரிடம் போய் சொல்றது..?” என்று பேசினார்.
இதன் பின்னர் நடிகை சாய் பிரியா செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் இந்தப் படத்தில் இளவரசியா நடிச்சிருக்கேன். ஆனாலும் என் பெயரை பிரிண்ட் செய்ய மறந்துட்டேன்னு சொல்றாங்க.. இதைத்தான் நான் இயக்குநரிடம் கேள்வியாகக் கேட்டேன்…” என்றார்.
The post விழா மேடையில் இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை..! appeared first on Touring Talkies.
]]>The post பிரபாஸ்-கீர்த்தி சனோன் காதலா..? appeared first on Touring Talkies.
]]>நடிகர் பிரபாஸுக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தாலும் அவர் சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலி படத்தில் நடிப்பதற்காக அவர் கிட்டத்தட்ட 5 வருடங்களை ஒதுக்கிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி காதலித்து வருகிறார்கள் என முன்பு கிசுகிசுக்கள் வந்தாலும் அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
அதன் பின் தற்போது பிரபாஸ் ஹிந்தி நடிகை க்ரித்தி சனோன் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசு தொடங்கி இருக்கிறது. பிரபாஸை திருமணம் செய்ய விரும்புவதாக நடிகை கீர்த்தி சனோன் ஒரு பேட்டியில் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகரான வருண் தவான் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கீர்த்தி சனோன் காதல் பற்றி கூறி இருக்கிறார்.
“கீர்த்தி சனோன் சிங்கிள் இல்லை. அவர் பெயர் ஒரு ஆணின் இதயத்தில் எழுதப்பட்டுவிட்டது. அந்த ஆண் தற்போது தீபிகா படுகோன் உடன் ஷூட்டிங்கில் இருக்கிறார்” என கூறியதைடுத்து பாலிவுட் உலகில் பரபரப்பு எழுந்துள்ளது.
தற்போது பிரபாஸ்தான் தீபிகா உடன் ப்ராஜெக்ட் கே என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். அதனால் தற்போது பிரபாஸ் – க்ரித்தி சனோன் காதல் இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.
The post பிரபாஸ்-கீர்த்தி சனோன் காதலா..? appeared first on Touring Talkies.
]]>The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்திற்காக பூவிருந்தவல்லி அருகே நேற்றைக்கு நடந்த ஷூட்டிங்கில் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அனுமதியின்றி அந்த யானைகள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே மக்களிடம் நேர்காணல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை செய்தியாளர்களை தாக்கி பெரும் பிரச்சினையாகி, இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் கைதாகியுள்ளனர். மேற்கொண்டு படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதால் புதிய பிரச்னை ஒன்றும் உருவாகியுள்ளது.
அனுமதியின்றி யானைகள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு விலங்குகள் நல வாரியம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில், “விலங்குகளை பயன்படுத்தும் முன்பு விதி 31ன்படி விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். வாரியத்தின் அனுமதியின்றி பயன்படுத்துவது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 26ன் கீழ் குற்றமாகும். வன விலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 அட்டவணை-1ன் கீழ் யானைகள் பாதுகாக்கப்படும் விலங்குகள் ஆகும். மற்றும் விதி 7(2)இன்படி, திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுவது அவசியம். அதேபோல் பயன்படுத்தும் விலங்கு வகை, விலங்குகளின் வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்தும் முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். எனவே அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ‘வாரிசு’ படத்துக்கு தொடர்ந்து எழும் சிக்கல்களால் படக் குழு பெரிதும் கவலையடைந்துள்ளது.
The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.
]]>The post “வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>இது குறித்து இயக்குநர் பேரரசு பேசும்போது, “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது. தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.
நாம் மொழி பார்த்து படம் பார்ப்பதில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு ‘பீஸ்ட்’ படம் வெளியான அதே சமயத்தில்தான், ‘கே.ஜி.எப்.-2’ படமும் வெளியானது. அந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கனவே கிடைத்த வெற்றியால் ‘பீஸ்ட்’ படத்திற்கு போலவே, கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்திற்கும் அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டது.
இதேபோலத்தான் ‘பொன்னியின் செல்வன்’ வெளியான சமயத்தில் கன்னடத்திலிருந்து வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் இங்கே வரவேற்பை பெற்றதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன.
நாம்தான் திராவிடம் என்கிற பாசத்துடன் அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை தமிழர்களாக மட்டும்தான் பார்க்கிறார்கள். ‘வாரிசு’ படத்தை தயாரித்தவரும், இயக்கியவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள்தான். ஹீரோ மட்டும்தான் தமிழ். அதனால் ஹீரோவை கார்னர் பண்றாங்க.
இப்போது அவர்கள் கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறை நம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. இதை சாதாரண பிரச்சினையாக கடந்து போக முடியாது. இது நமது மானப் பிரச்சனை.
தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் சரிசமமான முடிவெடுக்க வேண்டிய தென்னிந்திய வர்த்தக சபை இதில் தலையிடவேண்டும். மவுனமாக இருப்பது தப்பாக போய்விடும். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் குரல் கொடுக்க வேண்டும்.
‘வாரிசு’ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்து இங்கே வேறு எந்த மொழி படமும் ரிலீஸ் ஆகாத அளவுக்கு பிரச்சனை பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நம் ரோஷத்தையும், உணர்வையும் தூண்டி விடக்கூடிய ஒரு விஷயம்..” என்றார்.
The post “வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>இது குறித்து இயக்குநர் லிங்குசாமி கருத்து தெரிவிக்கையில், “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது.
‘வாரிசு’ ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக ‘வாரிசு’க்கு முன்; ‘வாரிசு’க்கு பின் என்று இந்திய சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்புதான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்..” என்றார்.
The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>