The post அஜித்தின் ‘விடா முயற்சி’ எப்போது திரைக்கு வரும்? appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் பல நாட்கள் நடந்தது. வெளிநாடு என்பதாலும், அதிக நாட்கள் படப்பிடிப்பு என்பதாலும் பட்ஜெட் அதிகமானதால் படக்குழு ஒரு கட்டத்தில் சென்னை திரும்பியது. மறுபடியும் எப்போது படப்பிடிப்பு என்பதை அஜித்குமாருக்கு தெரிவிக்கவில்லை. இதனால், அஜித்குமார் பைக் டூர் சென்றார்.
‘விடாமுயற்சி’ படத்தின் எடுத்த காட்சிகள் வரை எடிட் செய்து போட்டு பார்த்த இயக்குனர் மகிழ் திருமேனி இன்னும் இருபத்தி ஏழு நாட்கள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்க வேண்டும் என்பதை தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் அஜித்துக்கு தெரிவிக்கப்பட்டதும் படப்பிடிப்பிற்கு தேதி கொடுத்த அஜித், வெளிநாடு செல்லும் முன் உடல் பரிசோதனைக்கு சென்றார். அப்போது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் சின்ன பிரச்சினை இருந்ததால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அஜித்குமார் அறுவை சிகிச்சைக்கு தயாரானார். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. உடல்நிலை தேறி வந்ததும் கடந்த வாரம் அஜித்குமார் அஜர்பைஜான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
பதினைந்து நாட்கள் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து அவரது காட்சிகளை முடித்துக் கொடுக்கும் அஜித், சென்னை திரும்பியதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
‘குட் பேட் அக்லி’ படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் அந்தப் படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த ஆண்டில் அஜித்குமார் நடிக்கும் இரண்டு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post அஜித்தின் ‘விடா முயற்சி’ எப்போது திரைக்கு வரும்? appeared first on Touring Talkies.
]]>The post அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ பட அப்டேட் appeared first on Touring Talkies.
]]>சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுத,கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது.
The post அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ பட அப்டேட் appeared first on Touring Talkies.
]]>The post லியோ: புதிய அப்டேட்; அர்ஜூன் கதாபாத்திரம் என்ன? appeared first on Touring Talkies.
]]>அனிருத் இசையமைத்துள்ளார். படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது.
படத்தின் பல்வேறு அப்டேட்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்படுகின்றன. சில நாட்களுக்கு முன், சஞ்சய் தத்தின் கிளிப் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இதேபோல் நடிகர் அர்ஜூனின் பிறந்தநாளான நேற்று, புதிய கிளிப் வீடியோ வெளியானது.
அதில் மிரட்டலான தோற்றத்தில் அர்ஜூன் நடித்து அசத்தி உள்ளார். அது ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.
அர்ஜுன் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். சுமார் 41 விநாடிகளுக்கு வெளியாகியுள்ள அந்த வீடியோவில் அர்ஜுன் ஏதோ ஒரு பெரிய கேங்ஸ்டர் போலவும் அவர் விக்ரம் பட ரோலக்ஸ் போல யார் கழுத்தையோ வெட்டுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன். அவர் பெயர் ஹரோல்டு தாஸ் என காட்டப்படுகிறது.
தற்போது இந்த கிளிப்பிங் வீடியோ வைரலாகி வருகிறது.
The post லியோ: புதிய அப்டேட்; அர்ஜூன் கதாபாத்திரம் என்ன? appeared first on Touring Talkies.
]]>The post வடிவேலு நடிக்க மறுத்த காமெடி: ஆனா சூப்பர் ஹிட்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் இந்த காமெடி ஷூட் செய்யும்போது, ‘இது என்ன அக்கா என்றெல்லாம் சொல்றீங்க இது வேண்டாம்’ என்று இயக்குனர் சுந்தர்சியிடம் வடிவேலு கூறியுள்ளார். அதை கேட்ட சுந்தர்சி, ‘வடிவேலு உனக்கு அக்கா இருக்கா, எனக்கு ரெண்டு அக்கா இருக்கு தைரியமா நடி நல்லா இல்லனா சித்தினு மாத்திக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு வேண்டா வெறுப்பாக நடித்த வடிவேலுவுக்கு இந்த காமெடி காட்சி ஒரு அடையாளமாகவே மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளா.
The post வடிவேலு நடிக்க மறுத்த காமெடி: ஆனா சூப்பர் ஹிட்! appeared first on Touring Talkies.
]]>The post ஜென்டில்மேன்: ”ஏன் நடிக்க மறுத்தேன்?” கமல் appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம்தான். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஜீன்ஸ் படத்தின் நவீன தொழில்நுட்பம், உலக அதிசயங்கள் ஏழையும் காண்பித்து ரசிகர்களை வியக்க வைத்திருப்பார்.
அவர் எடுத்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் முதலில் கமல் நடிப்பதாக கூறப்பட்டது. பின் அர்ஜுன், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்து வெளியானது.
இது பற்றி கமல் ஒரு பேட்டியில், “ஆரம்பத்தில் ஜென்டில்மேன் கதை வேறு அதைத் தான் என்னிடம் சொன்னார். அவர் சொன்ன பிராமண பிள்ளை கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை அதில் நடிக்க விருப்பம் இல்லை என்று ஒதுங்கி விட்டேன். இப்போ வெளிவந்த ஜென்டில்மேன் கதை வேறு” என்று நடிகர் கமல் கூறினார்.
The post ஜென்டில்மேன்: ”ஏன் நடிக்க மறுத்தேன்?” கமல் appeared first on Touring Talkies.
]]>The post எனக்கு பிடித்த ஹிரோ…மனம் திறந்த அர்ஜுன் appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஆக்ஷன் ஹிரோ நடிகர் அர்ஜுன்.பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு விருந்தாகவும் தேசப்பற்று உள்ள கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்த கூடியவர் அர்ஜுன்.
அவர் ஒரு நேர்காணலில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்? எனக் கேட்கப்பட்டது அதற்கு அவர் எனக்கு புரூஸ்லி ரொம்ப பிடிக்கும் அவர் ஒரு சூப்பர் ஹீரோ. அவரது சட்டை காட்சிகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்ப வரைக்கும் யாரும் அவரைப் போன்று சண்டை காட்சியில் நடிக்க முடியாது உண்மையில் அவர் எனக்கு ஹீரோ தான் என்றார்.
The post எனக்கு பிடித்த ஹிரோ…மனம் திறந்த அர்ஜுன் appeared first on Touring Talkies.
]]>The post ஆட்டம் போட அடம் பிடித்த கவுண்டமணி! appeared first on Touring Talkies.
]]>நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, “ஆடித்தான் ஆவேன்” என்று அடம் பிடித்த சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகர் காதல் சுகுமார்.
“ஜென்டில்மேன் திரைப்படத்தில் வரும் “ஒட்டகத்தை கட்டிக்கோ” பாடல் படமாக்கப்பட்ட நேரம். அதில் அர்ஜூன் மற்றும் மதுபாலா ஆகியோர் மட்டும்தான் நடனமாடுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த கவுண்ட மணி, தானும் அந்த பாடலில் ஆடுவேன் என்று கறாராக சொல்லிவிட்டார். அது இயக்குநர் ஷங்கருக்கு முதல் படம். தவிர கவுண்ட மணி அப்போது பீக்கில் இருந்தார். ஆகவே அவரையும் நடனமாட விட்டுவிட்டார்” என்றார் காதல் சுகுமார்.
The post ஆட்டம் போட அடம் பிடித்த கவுண்டமணி! appeared first on Touring Talkies.
]]>The post அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>அவரது தொடர் திரில்லர் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, தற்போது புதிதாக ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தை GS ARTS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் G.அருள்குமார் தயாரிக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் ராஜேஷ், பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் பல முக்கிய பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு, இசை – பரத் ஆசீவகன், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – அருண் சங்கர், சண்டை இயக்கம் – விக்கி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, எழுத்து, இயக்கம் – தினேஷ் லட்சுமணன்.
இந்தப் புதிய படம் குறித்து தயாரிப்பாளர் G.அருள் குமார் பேசும்போது, “இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும்.
இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும்.
நடிகர் அர்ஜுன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்…” என்றார்.
The post அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>