The post தெலுங்கு வாடை வருது – நாடகங்களில் நடித்து விட்டு வா.! appeared first on Touring Talkies.
]]>பிரபல நடிகர்களுடன் பல படங்களில் நாயகியாகவும் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தவர் பி.ஆர் வரலட்சுமி.அனைத்து முக்கிய தென்னிந்திய மொழிகளில் இதுவரை 600 திரைப்படங்களில் நடித்துள்ளார். பூர்வீகம் தெலுங்கு என்பதால் சினிமாவில் தமிழ் பேசும் போது தெலுங்கு கலந்த தமிழில் பேசியுள்ளார்.
இதைப் பார்த்த இயக்குனர் உனக்கு தெலுங்கு வாடை வருகிறது அதனால் நீ நாடகங்களில் நடித்து விட்டு வா எனக் கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர் தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.வீடியோ கீழே….
The post தெலுங்கு வாடை வருது – நாடகங்களில் நடித்து விட்டு வா.! appeared first on Touring Talkies.
]]>The post பாராட்டிய தனுஷ், நன்றி சொல்லிப் பதிவிட்ட லாரன்ஸ் !! appeared first on Touring Talkies.
]]>முன்னணி நடிகராக மிகச்சிறந்த எண்டர்டெயினராக வலம் வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், தொடர்ச்சியாக குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த ஹாரர் படங்கள் மூலம், ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை, தந்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தில், முதல் முறையாக வழக்கத்திற்கு மாறாக தன் தோற்றம் மேனரிசம் முதல் அனைத்தையும் மாற்றி, வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஜிகர்தண்டா படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் எனப் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாளை 10.11.2023 தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தினை முன்னதாக பார்த்த நடிகர் தனுஷ், தன் சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தையும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பையும் பாராட்டிப் பதிவு செய்துள்ளார் அப்பதிவில்…
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்தேன். @karthiksubbaraj இன் அருமையான படைப்பு, அற்புதமான நடிப்பைத் தருவது @iam_SJSuryahக்கு வழக்கமானதாகிவிட்டது. ஒரு நடிகராக @offl_Lawrence புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். @Music_Santhosh படத்திற்கு அழகு. கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தைத் திருடிவிடும். படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷின் பதிவையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ்
சகோதரரே உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி உங்களின் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய ராகவேந்திரா ஸ்வாமியை பிரார்த்திக்கிறேன். என்று நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.
இரண்டு முன்னணி நடிகர்களின் ஈகோ இல்லாத இந்த உரையாடல்களை, ரசிகர்கள் இணையத்தில் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post பாராட்டிய தனுஷ், நன்றி சொல்லிப் பதிவிட்ட லாரன்ஸ் !! appeared first on Touring Talkies.
]]>The post இயக்கம் – நடிப்பு வேறு வேறு நடிக்கும் ஆர்வம் இல்லை வெற்றிமாறன்.! appeared first on Touring Talkies.
]]>இதில், கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது: “நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால்தான் சமாளிக்க முடியும். அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. ‘வட சென்னை‘ ராஜன் கதாபாத்திரம் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் குறித்து நான் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் அதைப் பற்றி சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேனோ என்று நினைத்தார். ஆனாலும் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது” இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.
முன்னதாக இதே விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை” என்று கூறியிருந்தார். அதேபோல அண்மையில் ‘லியோ’ படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க வெற்றிமாறனை பலமுறை தொடர்பு கொண்டு அவர் மறுத்துவிட்டதாக கூறியிருந்தார்.
The post இயக்கம் – நடிப்பு வேறு வேறு நடிக்கும் ஆர்வம் இல்லை வெற்றிமாறன்.! appeared first on Touring Talkies.
]]>The post “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>அதில் அவர், “தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் படத்தில் நடிக்க மாட்டார்.. அரசியலில் கவனம் செலுத்துவார் என்று யூகமாக செய்திகள் வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு படத்துக்குப் பிறகு ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார்.
தவிர அதன் பிறகும்கூட, அவர் தொடர்ந்து படத்தில் நடிக்க வேண்டும். பத்து வருடங்கள் கழித்து அரசியலுக்கு வரலாம்.
கமல் கூட அரசியலில் தீவிரமாக இருந்தபோது திரைப்படங்களில் நடிக்கவில்லை.
விஜய் தொடரந்து நடிக்கணும்.. கமல்சாரே அரசியலில் தீவிரமா இருந்தபோது படங்களில் நடிக்கவில்லை. அரசியலைவிட்டு விலகி நிற்கும்போதுதான் திரையுலகில் கவனம் செலுத்தினார். இப்போ அரசியலில் கான்சர்டேட் பண்ணாம தொழிலில் ஈடுபடுகிறார்.
அது போல விஜயும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. திரையுலக தொழிலுக்கும் நல்லது” என்று தெரிவித்தார் திருப்பூர் சுப்ரமணியம்.
இதுபோன்ற சுவாரஸ்யமான பேட்டிளை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>The post சினிமாவில் தோனி? :சாக்ஷி விளக்கம் appeared first on Touring Talkies.
]]>படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியனது.
இப்படத்தை விளம்பரப் படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஜூலை 25) சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் சாக்ஷியிடம், “தோனி சினிமாவிலும் கால் பதிப்பாரா?” என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதலளித்த அவர், “நல்ல கதை என்றால் அவர் அதில் நடிக்கலாம். அவர் ஏற்கெனவே ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். அவருக்கு கேமரா பயம் கிடையாது. எப்படி நடிக்க வேண்டும் என்றும் அவருக்கு தெரியும். ஏதேனும் நல்ல கதை அமைந்தால், அதில் அவர் நடிக்கக் கூடும். அவருக்கான கதையை தேர்வு செய்யவேண்டுமென்றால், நான் ஆக்ஷன் கதைகளைத் தான் தேர்ந்தெடுப்பேன். அவருக்கு ஆக்ஷன் படங்கள் மிகவும் பிடிக்கும்” என்றார்.
The post சினிமாவில் தோனி? :சாக்ஷி விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஜி.ஆர். பற்றி இப்படிச் சொன்னாரா சிவாஜி ? appeared first on Touring Talkies.
]]>சென்னை கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரம் சிவாஜியுடன் நெருங்கி பழகியவர். ஒருமுறை அவர் சிவாஜியிடம் ‘எம்.ஜி.ஆரின் நடிப்பு பற்றி உங்களின் கருத்து என்ன?’ என கேட்டாரம். மனதுக்குள் எப்படியும் எம்.ஜி.ஆரின் நடிப்பை சிவாஜி மட்டமாகத்தான் பேசுவார் என சிதம்பரம் நினைத்தாராம். ஆனால், சிவாஜி சொன்னது வேறு எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். நான் எனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறேன். அவரின் படங்களில் அவர் ஊருக்காக உழைப்பார். என்னுடைய படங்கள் குடும்ப படங்கள். அவருடையை பாணி படங்களில் எம்.ஜி.ஆர் மிகச்சிறந்த நடிகர். அந்த பாணி கதைகளில் அவர் பெரிய நடிகர்’ என எம்.ஜி.ஆரை பாராட்டினாராம்.
போட்டி நடிகர்களாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவரும் ஒருவரை ஒருவர் மதித்தும், புரிந்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post எம்.ஜி.ஆர். பற்றி இப்படிச் சொன்னாரா சிவாஜி ? appeared first on Touring Talkies.
]]>The post கடைசிவரை நிறைவேறாத சிவாஜியின் ஆசை! appeared first on Touring Talkies.
]]>உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது இயக்குனர் மணிரத்தினமும் ஹார்ட் பிரச்சனையால் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டு இருந்தார்.
இதை கேள்விப்பட்ட சிவாஜி மணிரத்னத்தின் மகன் நந்தனை சந்தித்து பேசி இருக்கிறார். பொதுவாக சில விஷயங்களை பேசிய அவர் திடீரென, ‘உன் அப்பாவிடம் சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுடா’ என்று கேட்டிருக்கிறார். இதனால் ஆனந்த அதிர்ச்சி அடைந்த நந்தன் தன் அப்பாவிடம் இதை அப்படியே கூறியிருக்கிறார்.
இதைக்கேட்ட மணிரத்தினம், ‘சிவாஜி போன்ற ஒரு ஜாம்பவானை வைத்து படமெடுப்பது என் பாக்கியம். விரைவில் அவருக்கான கதையை தயார் செய்வேன்’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த சம்பவம் நடந்த மறுநாளே சிவாஜி இறந்து விட்டார். அந்த வகையில் நடிகர் திலகத்தின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.
இதையடுத்து மணிரத்னம், ‘சிவாஜி மட்டும் இன்னும் வாழ்ந்திருந்தால், யாரும் இதுவரை பார்க்காத ஒரு கேரக்டரில் வேறு மாதிரி காட்டி இருப்பேன்’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
The post கடைசிவரை நிறைவேறாத சிவாஜியின் ஆசை! appeared first on Touring Talkies.
]]>The post புதிய படங்கள்!: மீரா ஜாஸ்மின் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர், சுமார் 10 வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விமானம் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்துள்ளார். அடுத்து மாதவனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் அவர், “நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த எனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். இனி தொடர்ந்து நடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
The post புதிய படங்கள்!: மீரா ஜாஸ்மின் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>The post நடிப்பை எனது பெற்றோர் மரியாதைக்குறைவாக பார்க்கின்றனர்! :ஐஸ்வர்யா லட்சுமி appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் “எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகப் பயிற்சி எடுக்கும் போதே நடிகையானேன். சினிமா குறித்து எனது பெற்றோருக்கு எதிர்மறையான கருத்து உள்ளது. வெளியில் பார்த்ததையும் கேட்டதையும் வைத்து படம் குறித்து எனக்கு மோசமான கருத்து உள்ளது. நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக கருதவில்லை. என்னுடைய சினிமா வாழ்க்கை எனக்கு இன்னும் பிடிக்கவில்லை” என்றார்.
The post நடிப்பை எனது பெற்றோர் மரியாதைக்குறைவாக பார்க்கின்றனர்! :ஐஸ்வர்யா லட்சுமி appeared first on Touring Talkies.
]]>The post நடிப்பு வேண்டாம்!: விஜய் சொன்னது ஏன்? appeared first on Touring Talkies.
]]>ஆனால் அவரே, “ஒரு கட்டத்தில் நடிப்பில் இருந்து விலகி விடுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.
இது குறித்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் கூறியிருக்கிறார். விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் நெஞ்சினிலே திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்.
இவர், “அந்த படப்பிடிப்பு சமயங்களில் விஜய் என்னுடன் நெருங்கி பழகி இருக்கிறார். நிறைய விசயங்களை பகிர்ந்துகொள்வார். அப்போது ஒருமுறை, ‘2000ம் வருடத்தில் இருந்து நடிப்பில் இருந்து விலகி விடப் போகிறேன். படங்களை இயக்குவதே எனக்கு விருப்பமாக இருக்கிறது’ என்று கூறினார். இதைக்கேட்ட எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது” என்று தெரிவித்து இருக்கிறார் விஜய் மில்டன்.
The post நடிப்பு வேண்டாம்!: விஜய் சொன்னது ஏன்? appeared first on Touring Talkies.
]]>