Friday, April 12, 2024

சூர்யா, ஜோதிகா நடிப்பில் சத்தமேயில்லாமல் உருவாகி வரும் புதிய திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியான படங்களிலேயே சிறப்பானதாகவும், வசூலில் அதிகமானதாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சூர்யா ஒரு திரைப்படத்தை சத்தம் இல்லாமல் துவக்கி, அதில் நடித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் ஜோதிகாதான் கதையின் நாயகியாக நடிக்கிறாராம். ஆனாலும், இந்தப் படத்தில் இருக்கும் ஒரு முக்கியமான வக்கீல் கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடிக்கிறாராம். இந்தப் படத்திற்காக இதுவரையிலும் 20 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார் சூர்யா. சரவணன் என்ற புதுமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

சைலன்ட்டாக படத்தைத் தயாரித்து வெளியிடுவது சூர்யாவின் வழக்கம் இல்லையே என்றாலும், இந்தப் படம் பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்போது அமைதிக்கான காரணமும் தெரியும் என்கிறார்கள் படவுலகினர்.

இந்தப் படத்தில் சூர்யா நடிப்பதினால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப் போயிருக்கிறது. அதேசமயம் இந்தப் பாண்டிராஜ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். அது முடிந்தால்தான் ஷூட்டிங் துவங்கும் என்கிறது சன் பிக்சர்ஸ் வட்டாரம்.

- Advertisement -

Read more

Local News