நகைச்சுவை நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டவர் சூரி. தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் இயகத்தில் விடுதலை படத்தில், நாயகனாக நடிக்கிறார் சூரி.
இந்த நிலையில் அவர் பழைய நினைவு ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
“
“நான் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்து முடித்ததும், விஜய் சேதுபதியிடம் ‘எனது காமெடி நன்றாக இருக்கிறதா?’ என கேட்டேன். அப்போது விஜய் சேதுபதி ‘நீ முதலில் உன்னை காமெடியன்னு முடிவு பண்ணிக்காத, காமெடி நல்லாதான் இருக்கு, ஆனா அதை தாண்டி நீ ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட். உன்னால எந்த கேரக்டரையும் நல்லா பண்ண முடியும். அதுனால் அதற்கு முயற்சி செய்’ என்றார்.
அதே போல தற்சமயம் காமெடியனாக இல்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரமாக விடுதலை படத்தில் நடித்துள்ளேன். இதைவிட மகிழ்ச்சி, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிப்பதுதான்” என்றார் சூரி.