Thursday, April 11, 2024

கனகாவின் வாழ்க்கையில் இத்தனை சோகமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகையாக விளங்கிய கனகா,  தற்போது தனிமையில் வாழ்கிறார். சிறுவயதிலேயே தந்தை பிரிந்து சென்றுவிட்டார்.. தாயாரான நடிகை தேவிகாவும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.  திருமண வாழ்க்கையும் தோல்வி அடைந்துவிட்டது.

இந்த நிலையில், பாழடைந்த வீட்டில் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார் கனகா.

இது குறித்து பத்திரிகையாளர் பாலு, “கனகாவின் அம்மா தேவிகாவால் நடிகர் ஒருவர் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிகர் ஆனார். அந்த நடிகரின்  மகன் தான் ராமச்சந்திரன். இவர் கனகாவுக்கு பிஏவாக இருந்தார். கனகாவிற்கு படப்பிடிப்பு செல்வது, கதை கேட்பது, சம்பளம் வாங்குவது என அனைத்தையும் இவர் தான் செய்து கொண்டிருந்தார்.

பின் இராமச்சந்திரன் கனகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால், ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்ட கனகா அவரை போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என்று கூறி வீட்டை விட்டு அனுப்பி விட்டார். பிறகு சில வருடங்கள் கழித்து ராமச்சந்திரன் இறந்த பிறகு தான் கனகாவுக்கு அவர் தன்னை காதலித்த உண்மை தெரிய வந்திருக்கிறது. இதனால் மணமுடைந்து போன கனகா சினிமாவும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று தன்னைத் தானே வீட்டில் சிறை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார்” என்று பாலு தெரிவித்து உள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News