Thursday, April 11, 2024

நாய்க்குட்டியோடு நான்கு  நாள் அலைந்த எஸ்.ஜே.சூர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

பன்முகத் திறமையால் தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் இயக்குனர் மற்றும் நடிகர் தான் எஸ் ஜே சூர்யா. வசந்த் மற்றும் சபாபதி ஆகியோரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். மேலும் படங்களிலும் சின்ன கதாபாத்திரம் ஏற்று தலை காட்டி வந்தார்.

வசந்த் இயக்கத்தில் அஜித் மற்றும் சுவலட்சுமி இணைந்து நடித்த மாபெரும் வெற்றி தந்த படம் தான் ஆசை. இதிலும் எஸ்.ஜே.சூர்யா உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இப்படத்தில் தன் காதலியான சுவலட்சுமிக்கு, அஜித் நாய்க்குட்டி ஒன்றை பரிசளிப்பதாக காட்சி இடம் பெறும். இக்காட்சிக்காக நாய்க்குட்டியை டெல்லிக்கு கொண்டு செல்வதாக இருந்தது.

அந்நிலையில் அசிஸ்டன்ட் இயக்குனராக இருந்த எஸ் ஜே சூர்யாவிடம் பணத்தை கொடுத்து நாய்க்குட்டியை டெல்லிக்கு கொண்டு செல்லுமாறு கூறப்பட்டதாம். அதை கேட்ட உடனே மறுக்காது நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு, பக்கத்தில் இருந்த பாத்திரக்கடையில் வாலி ஒன்றையும், மேலும் நாய்க்குட்டிக்கு பாலையும் வாங்கிக் கொண்டு ரயில்வே நிலையம் சென்று விட்டாராம்.

மேலும் ரிசர்வேஷன் இல்லாது இரண்டு பகல் 2 இரவு கழித்து டெல்லி சென்று நாய்க்குட்டியை ஒப்படைத்தாராம். அதன் பின்னால் அப்படைப்பிடிப்பு எடுக்கப்பட்டதாம்.

இவரது அர்ப்பணிப்பான உழைப்பைப் பார்த்துதான் அஜித், பட  வாய்ப்பு அளித்தார் என பத்திரிகையாளர் ஜெயராம் கூறினார்.

 

- Advertisement -

Read more

Local News