சித்தார்த் நடித்து, தயாரித்த சித்தா திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று இருக்கிறது.
இந்நிலையில் தாய்லாந்து கடற்கரையில் அவர் இருக்கும் படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இது பழைய படம். தவிர இது குறித்து சித்தார்த் அப்போதே பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த வருடம் தாய்லாந்துக்கு சென்றார். அப்போது ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் பீச்சுக்கு சென்றார். இரவு நேரத்தில் அங்கு இருந்த லோக்கல் மீனவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை.
நள்ளிரவு ஆகிவிட்டதால், அந்த மீனவரிடம் சித்தார்த் இங்கே தூங்க இடம் இருக்கா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த மீனவர், இது உன்னுடைய பீச்தான் இங்கேயே படுத்து தூங்கு என சொல்ல; அவரும் அங்கேயே தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை எழுந்து தனது ஓட்டல் அறைக்கு வந்தார்.
இதை அவரே குறிப்பிட்டு இருக்கிறார். இந்த படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.