Thursday, April 11, 2024

சரிதாவின் வாழ்க்கையில் நடந்தது என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகை சரிதா, தனது பதினைந்து வயதில், கே.பி. இயக்கத்தில் மரோசித்ரா என்கிற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் வெளியான மாவீரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் குறித்து பத்திரிகையாளர் மணி கூறும்போது, “மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்து  கொண்ட சரிதா மீண்டும் சினிமாவில் நடிக்க முடியாமல் பெரிய பிரேக் எடுத்து விட்டார்.  2011ம் ஆண்டு  நடிகர் முகேஷையும் சரிதா விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். விஜய்யின் பிரெண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் அம்மா ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதல் திருமணம் 15 வயதில் நடந்தது. ஆறே மாதத்தில் இது பிரிவில் முடிந்தது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பிறகுதான் முகேசை திருமணம் செய்து அவரையும் பிரிந்தார். சிறந்த நடிகையான அவரது வாழ்க்கை மட்டும் மர்மமாகவே இருந்துவிட்டது” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News