Wednesday, April 10, 2024

காட்டுவாசியாக நடிக்க தயாரான சரத்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், தனது வாழ்க்கை சம்பவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் நடிகர் சரத்குமார்.

அதில் ஒரு சம்பவம்..

“நான் ஆணழகன் போட்டியில் வென்ற பிறகு, தயாரிப்பாளர் ஒருவர் அணுகினார். அது பேசாத படம். காட்டுவாசிகளை வைத்து உருவாக இருந்த படம். நானும் நடிக்க தயாராகிவிட்டேன்.

தயாரிப்பாளர் என் அப்பாவிடம் வந்து அனுமதி கேட்டார். ஆனால்  அவரை திட்டி துரத்திவிட்டார். மேலும் என்னிடம்,  முதலில் பட்டப்படிப்பு படி. பிறகு நடிக்கலாம் என்று கூறிவிட்டார்.

அவர் ஒப்புக்கொண்டு இருந்தால், எனது முதல் படத்தின் கதாபாத்திரம் ஆதிவாசியாக இருந்திருக்கும்” என்றார் சரத்குமார்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைச் செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்..

 

- Advertisement -

Read more

Local News