Wednesday, April 10, 2024

மனைவி ராதிகாவின் திருமணங்கள்!: கணவர் சரத் குமார் பதில்  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சரத்குமார் முதன் முதலாக சில விசயங்களை மனம் திறந்து டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பேசி இருக்கிறார்.

இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்கள் 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா இரண்டு மகள்கள்.

இன்னொரு புறம் நடிகை ராதிகா மலையாள மற்றும் தமிழ் திரைப்பட  நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார். பிறகு விவாகரத்து பெற்றார்.

அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் முறிந்தது.

இந்த நிலையில்தான் சரத் – ராதிகா திருமணம் நடந்தது.

இவர்களின் திருமணத்தை பலரும் விமர்சித்தனர். இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார் சரத்குமார்.

அவர், “எல்லோருடைய வாழ்க்கையிலும் பாதிப்புகள், பிரச்சனைகள் இருக்கலாம். அதை பிறர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நம்மோடு ஒருவர் உறவில் இருக்கும் போது அவர்களுடைய கடந்த வாழ்க்கையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நடிகராக இருக்கும் போது என்னுடைய காதல் கதைகளை நான் ராதிகாவிடம் நிறைய சொல்லி இருக்கிறேன். அப்போது, அவர் என் மனைவியாக வருவார் என்பது எனக்கு தெரியாது. அவரும் என்னை அப்படி பார்த்ததில்லை. என்னை அவர் ஒரு நண்பனாக தான் பார்த்தார்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம். அரவிந்த்சாமி கூட கோபப்பட்டு, நீங்க ரெண்டு பேரும் எனக்கு தெரியாம காதலிச்சு இருக்கீங்க? இடையில் நான் இருந்திருக்கின்றேன். நீங்கள் இருவரும் என்னை கோமாளியாக்கி இருக்கீங்க. எனக்கு தெரியாம உங்க ரெண்டு பேருக்குமே கல்யாணமா? என்றெல்லாம் பேசி இருந்தார். –

அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் மத்தியில் இருந்த காதல் யாருக்கும் தெரியாது. இதனைத்தொடர்ந்து என்னுடைய கடந்த காலம் பற்றி அனைத்துமே நான் ராதிகாவிடம் கூறியிருக்கிறேன். உண்மையான காதல், நட்பு எப்போதும் காம்ப்ரமைஸ் ஆகிவிடும். கடந்த காலத்தை சுட்டிக் காட்டி நாங்கள் எப்பொழுதும் சண்டை போட்டதே கிடையாது.

திருமணமான பின்பு, என் மனைவியிடம் நான் கடந்த காலத்தை பற்றி கேட்கக் கூடாது என்று என் அப்பா என்னிடம் கூறியிருந்தார். உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி. மனைவியின் கடந்த காலம் தெரிந்தால் என்றாவது ஒரு நாள் நீங்களே தவறி அதை வார்த்தைகளாக விட்டுவிடுவீர்கள் என்று கூறுவார். ஆகையால் நானும் ராதிகாவும் கடந்த காலத்தை பற்றி பேச மாட்டோம்” என்று தெரிவித்து இருக்கிறார்.

அவரது பதில் அனைவரையும் நெகிழ வைத்து இருக்கிறது.

இந்த பேட்டியை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News