Thursday, April 11, 2024

வடிவேலு கூப்பிட்டா கூட போகவே மாட்டேன் !:  சாரப்பாம்பு பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மருதமலை படத்தில்   வடிவேலுவுடன் காமெடி காட்சியில் நடித்த சுப்புராஜின் கேரக்டருக்கு சாரைப்பாம்பு என்று பெயர். அதிலிருந்து இவர் சாரைப்பாம்பு சுப்புராஜ் என அழைக்கப்படுகிறார்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் “ராசாவின் மனசிலே என்ற படத்தில் நான் இணை இயக்குனராக பணிபுரிந்தேன். அந்த படத்தின் மூலம் தான் வடிவேலு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் இருந்து எனக்கும் வடிவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு என்னுடைய நண்பன் தனியாக படம் இயக்குவதால் என்னை தன்னுடன் வைத்துக்கொண்டான். ஆனால், அந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கும் போது அவன் இறந்து விட்டான்.

அதன் பிறகு ஒரு படத்திற்கு காமெடி ட்ராக் எழுத கூப்பிட்ட போது நான் மீண்டும் வடிவேலுவை சந்தித்தேன். அந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். நீ என்னுடன் இருந்து விடு என்று வடிவேலு சொன்னார். நானும் அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன்.

அது மட்டும் இல்லாமல் என்னை சாரைப்பாம்பு என்று எல்லோரும் அழைப்பதற்கு அவர் தான் காரணம். இருந்தாலும், வடிவேலு கூப்பிட்டாலும் நான் அவருடைய படங்களில் நடிக்க மாட்டேன்.

காரணம், எனக்கு சாப்பாடு போட்டு வளர்த்தவர் கேப்டன் விஜயகாந்த் தான். அவர் செய்த தர்மங்கள் எண்ணில் அடங்காதவை.  எத்தனையோ இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல பேரை அவர் வளர்த்து விட்டிருக்கிறார். அவரைப் பற்றி தவறாக பேசக்கூடிய தகுதி யாருக்குமே இல்லை. அனைத்து நடிகர் நடிகைகளும், கேப்டன் மாதிரி யாரும் இல்லை என்று தான் சொல்வார்கள். இறைவனை தாண்டி விஜயகாந்த் மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். அவரைப் பற்றி தவறாக பேசியதால் தான் வடிவேல் உடன் எனக்கு நடிக்க விருப்பமில்லை “என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News