தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து இருக்கிறார் சாய்பல்லவி. இவர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
“நான் 7-ம் வகுப்பு படிக்கும்போது எனது வகுப்பு மாணவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அவனுக்கு ஒரு காதல் கடிதம் எழுதினேன். அதை அவனுக்கு எப்படி கொடுப்பது என்று தெரியாமல் புத்தகத்தில் வைத்துக்கொண்டேன். என் அம்மா கண்ணில் அந்த கடிதம் பட்டு அளவு கடந்த கோபம் வந்துவிட்டது. என்னை செமையாக அடித்து விட்டார். அம்மா அடித்தது அதுதான் முதல் முறையும், கடைசி முறையும். இப்போது வரை மீண்டும் என் அம்மாவிற்கு கோபத்தை வரவழைக்கும் எந்த வேலையையும் நான் செய்யவில்லை” என்றார்.