மாமன்னன் படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்திருப்பது
இந்நிலையில் மாமன்னன் படத்தில் ஃபகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்த ரவீனா ச பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “மாமன்னன் படத்துக்காக மொத்தம் 17 நாட்கள் ஷூட்டிங் சென்றேன். நான் வசனம் பேசும் காட்சிகளிலும் நடித்தேன். ஆனால் அதை மொத்தமாக இயக்குநர் வெட்டி தூக்கிவிட்டார். அதனால்தான் என்னுடைய கேரக்டருக்கு வசனம் எதுவுமே படத்தில் இல்லை. Serial actress Raveena : இவரைத்தான் காதலிக்கிறாரா ரவீனா.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் கேள்வி! அதுகூட பரவாயில்லை என்னுடைய கேரக்டருக்கு பெயர்கூட இல்லை.
படம் வெளியான பிறகு அதை பார்த்த எனக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மீது கடுமையான கோபமும், வருத்தமும் ஏற்பட்டது. ஆனால் எனது கதாபாத்திரம் நன்றாக ரீச்சாகிவிட்டதால் அந்த கோபம் வருத்தமெல்லாம் போய்விட்டது” என்றார். ரவீனா ரவி: ரவீனா ரவி அடிப்படையில் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆவார். அப்படிப்பட்ட அவரையே படத்தில் ஒரு வசனம்கூட பேசவிடாமல் மாரி செல்வராஜ் செய்துவிட்டாரே என படம் வந்த புதிதில் நெட்டிசன்கள் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது. ரவீனா ரவி லவ் டுடே படத்தில் ப்ரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.