Thursday, April 11, 2024

பார்த்திபனால் நின்ற,  ரஜினி பட ஷூட்டிங்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பார்த்திபனால், ரஜினி பட படப்பிடிப்பு நின்றதை பத்திரிகையாளர் பாலு கூறினார்.

அவர், “பார்த்திபன் இயக்கிய உள்ளே வெளியே  படத்தில் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருந்தார் அதே நேரத்தில், ரஜினி நடித்த எஜமான் படத்திலும் நடித்து வந்தார்.

உள்ளே வெளியே படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, எஜமான் படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யாவை 2 நாட்கள் அனுப்புமாறு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தரப்பில் பார்த்திபனிடம் கேட்கப்பட்டது.

ஆனால், மிகுந்த பண நெருக்கடிக்கு இடையே பார்த்திபன் அப்படத்தை எடுத்து வந்தார். ஐஸ்வர்யாவை அனுப்பினால் ஒருநாள் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என நினைத்து அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் எஜமான் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது. யார் யாரோ கேட்டும் பார்த்திபன் மறுத்துவிட்டார். அதன்பின் ஏவிஎம் சரவணனே பார்த்திபனை தொடர்பு கொண்டு பேச அதற்கு சம்மதித்த பார்த்திபன் ஒருநாள் மட்டும் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தார்.

இப்படி பார்த்திபனின் சூழ்நிலையால், ரஜினி பட படப்பிடிப்பே சில நாட்கள் தடைபட்ட சம்பவம் நடந்தது” என்றார் பத்திரிகையாளர் பாலு.

- Advertisement -

Read more

Local News