மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிசா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.
ரசிகர்கள் படத்தை வரவேற்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரையுலக பிரமுகர்களும் படம் குறித்து பாசிடிவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதன் முதலாக ஒரு அரசியல் பிரபலம் படம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
அவர், பாஜக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான, எச்.ராஜா.
படம் குறித்து அவர், “பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பகுதி எல்லாவற்றையும் நாம் வரவேற்க வேண்டும். சோழப் பேரரசு ஒரு பெரிய பேரரசு. பெரும் வளம் கொண்ட பேரரசு. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முன்பாக இருந்த ஒரு காலத்தை இந்த படம் காட்சிப்படுத்தி இருக்கிறது. படம் எளிமையாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தை நம்மை ஆர்வத்தோடு பார்க்க வைப்பது நம் கலாச்சாரமும் பழமையும் தான் காரணம்” என்று கூறியிருக்கிறார்.