சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, “நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் புத்திசாலியான பெண், அழகு மட்டும் இருக்க கூடாது, அறிவும் இரக்க வேண்டும். இது கீர்த்தி சுரேஷூக்கு இருக்கிறது” என்று பாராட்டி இருந்தார்.
இப்படி கீர்த்தி சுரேஷ் குறித்து கமலின் இந்த பாராட்டு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
கமலின் பாராட்டு குறித்து பேசிய சினிமா பத்திரிக்கையாளர் ராஜூ,” கீர்த்தி சுரேஷ் இயல்பாகவே கவிஞர். மலையாளத்தில் சில கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய கவிதை பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா போல் படத்தின் ஷாட்டுக்கு இடையில் புத்தகங்கள் படிப்பார். இதெல்லாம் தெரிந்துதான் கமல்ஹாசன் அவரை பாராட்டியிருப்பார்” என கூறியுள்ளார்.