Friday, April 12, 2024

பூஜையுடன் துவங்கியது மிஷ்கினின் ‘பிசாசு-2’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் T.முருகானந்தத்தின் ராக்போர்ட் என்ட்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ படம் இன்று பூஜையுடன் துவங்கியது.

சைக்கோ’ வெற்றிக்கு பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ள இந்த ‘பிசாசு-2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே, திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும். சவரக்கத்தி’ படத்தில் நடித்த பூர்ணா இந்தப் படத்தில் மீண்டும் மிஷ்கினுடன் இணைந்துள்ளார்.

தயாரிப்பு – T.முருகானந்தம் (ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்), எழுத்து இயக்கம் – மிஷ்கின், ஒளிப்பதிவு – சிவா சாந்தகுமார், இசை – கார்த்திக் ராஜா, கிரியேடிவ் புரொடியூஸர் – K.B.்ரீராம், தயாரிப்பு மேற்பார்வை – L.B. ்ரீகாந்த் லக்‌ஷ்மணன், விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM), பிரியா.

‘பிசாசு-2’ படத்தின் வேலைகள் இன்று இனிதே பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகள் திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடியவுள்ளது.

- Advertisement -

Read more

Local News