Thursday, April 11, 2024

பிரபுவை திட்டிய பாண்டியராஜன்! பதிலுக்கு பிரபு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குநர் பாண்டியராஜன் முதன் முதலில் இயக்கிய “கன்னி ராசி” திரைப்படம் 1985ல் வெளியானது. இதில் பிரபு, ரேவதி, கவுண்டமணி, சுமித்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து இயக்குநர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அவர்,”சில காட்சிகளில் நான் எதிர்பார்த்ததைப் போல பிரபு நடிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு ஆரம்பித்தது முதலே அவரை திட்டிக்கொண்டே இருந்தேன். நான்காவது நாள், என்னை அருகில் அழைத்த அவர், ‘தம்பி, நீ என் நடிப்பு இன்னும் சிறப்பா வேணும்னு நெனச்சா.. என் கிட்ட தனியா வந்து சொல்லு, நான் கேட்டுக்குறேன். மத்தவங்க எதிரே திட்டாதே’ என்றார்.

அப்போதுதான் என் தவறை உணர்ந்தேன். பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த ஹீரோ அவர்.. அதுவும் சிவாஜியின் மகன். நானோ புதுமுக இயக்குனர். அவர் நினைத்திருந்தால் என் படத்தில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் என்னை அழைத்து மிகவும் சாந்தமாக பேசினார். அதுதான் அவரது பெருந்தன்மை” என்று பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார் பாண்டியராஜன்.

- Advertisement -

Read more

Local News