Wednesday, April 10, 2024

“அனைத்து கன்னடர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்..” :பிரகாஷ் ராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பெங்களூருவில் ‘சித்தா’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். அப்போது அவர்கள், “காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.

கர்நாடகாவைப் பூர்வீமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் எக்ஸ் தளத்தில் கருத்திட்ட அவர், “ஆம் அவை எங்களுடைய அரசியல் கட்சிகள் தான். பல ஆண்டுகளாக பிரச்சினையைத் தீர்க்க முடியாத கட்சிகள். அதற்குக் காரணமான தலைவர்களைக் கேள்வி கேட்காமல், இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களைக் கேள்வி கேட்காமல், சாமான்ய மக்களை கொடுமைப்படுத்துவதும், கலைஞர்களை இம்சிப்பதும் தவறு. அனைத்து அன்பான கன்னடிகர்கள் சார்பிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News