Thursday, April 11, 2024

நிர்வாண போட்டோ.. மிரட்டல்! நடிகை கைது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியை 75 வயது முதியவர், கொல்லம் பரவூரில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விட இருப்பதாக விளம்பரம் செய்திருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு பேசிய ஒரு பெண்  தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்று அந்த முதியவரிடம் கூறியிருக்கிறார். அது தொடர்பாக அந்த பெண் அடிக்கடி பேசி, அந்த முதியவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார்.

அவ்வாறு பேசும்போது அந்த பெண், ஆசை ஏற்படும் வகையில் பேசியிருக்கிறார். மேலும் கொல்லம் பரவூரில் உள்ள வீட்டில் தனியாக சந்திக்க விரும்புவதாகவும், இருவரும் உல்லாசமாக இருக்கலாம் எனவும் அந்த பெண் முதியவரிடம் தெரிவித்திருக்கிறார்.இதனால் சபலமடைந்த முதியவர், அந்தபெண்ணை தனியாக சந்திக்க சென்றிருக்கிறார். அப்போது அந்த பெண், முதியவரை நிர்வாணமாக்கி சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அந்த நேத்தில் அங்கு அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் முதியவரை மிரட்டி மேலும் நிர்வாண போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். பின்பு அவற்றை காட்டி ‘ரூ.25 லட்சம் தராவிட்டால், இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். முதியவர் ரூ.11லட்சம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்ட அவர்கள், ‘மேலும் 25 லட்சம் ரூபாய் வேண்டும்.  இல்லையென்றால் நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவோம்’ எனக்கூறி மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். முதியவரை மிரட்டி பணம் பறித்தது பத்தினம்திட்டா மாவட்டம் மலையாலப்புழா பகுதியை சேர்ந்த டி.வி. சீரியல் நடிகை நித்யா சசி மற்றும் கொல்லம் பரவூரை சேர்ந்த பினு என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை நைசாக வரவழைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி அந்த முதிய வரை பணம் ரெடியாகிவிட்டதாகவும், வாங்க வருமாறும் நடிகை நித்யா சசி மற்றும் பினுவிடம் தெரிவிக்க வைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் முதியவர் அழைத்த இடத்துக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News