தமிழில் கதாநாயகியாக வலம் வந்த நதியா, திருமணத்துக்குப் பிறகு திரையுலகைவிட்டு விலகினார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்து, அக்கா, அம்மா வேடங்களில் நடிக்கிறார்.
கவர்ச்சி ம் இல்லாமல் மக்கள் மத்தியில் தொடர்ந்து நேர்த்தியான உடையுடன் நடிக்கும் நடிகைகள் நதியா முக்கியமானவர்.
ஒரு பேட்டியில் அவரிடம் நீங்கள் நடித்த திரைப்படத்திலேயே சிறந்த படம் எனக் கேட்டால் எதை கூறுவீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு நதியா “இரண்டு படங்களை கூறுவேன். அதில் ஒன்று எனது முதல் திரைப்படமான பூவே பூச்சூடவா. இரண்டாவது திரைப்படம் ஜெயம் ரவியுடன் நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி.
ஏனெனில் சினிமாவில் இவ்வளவு படங்கள் நடித்து இருக்கும் பொழுதும் அந்த இரண்டு படங்களை வைத்துதான்என்னை அடையாளம் காண்கின்றனர் மக்கள்” என கூறியுள்ளார் நதியா.