90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தனது நடிப்பால் – கவர்ச்சியால் ரசிகர்களை வரை கவர்ந்தவர் மீனா. ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ரொம்பவும் யோசித்து தான் முடிவெடுப்பாராம். அதே போல மற்றவர்கள் சொல்வதை கேட்பதை காட்டிலும், தனக்கு தோன்றுவதை மட்டுமே செய்வாராம்.
இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார், விஜயகுமார், குஷ்பூ, சங்கவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார் கே.எஸ்.ரவிக்குமார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாரத்திரத்தில் நடிக்க மீனாவை அணுகினார்.
மீனாவோ, இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பதால் எப்படி நமக்கு பெயர் கிடைக்கும் என நடிக்க மறுத்தார். பிறகு ஒரு வழியாக ஒப்புக்கொண்டார். ஆனால், , படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
அந்த படம்தான் நாட்டாண்மை.
இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.