மறைந்த பழம்பெருமை நடிகை மனோரமா தனது சிறுவயதை காரைக்குடி அருகே இருக்கும் பள்ளத்தூரில்தான் கழித்தார். அப்போது அவருக்கு பாடுவது என்றால் மிகவும் இஷ்டம். அவர் ஊரில் நடக்கும் பல நிகழ்ச்சிகளிலும் பாடுவார். அதனாலேயே பெரியவிழா, சர்க்கஸ் போன்றவைகள் நடக்கும்போது மனோரமாவிற்கு
அழைப்பு வரும்.
அது போல, பள்ளத்தூருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்து இறங்கியது. அதை நடத்தி வந்த தம்பதிகள் மனோரமாவின் பெருமைகளை அறிந்து தங்களுடைய சர்க்கஸ் கம்பெனியில் இணைத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.
அதற்கு மனோரமாவின் தாயும் ஒப்புதல் வழங்கிவிட்டார்.
ஒரு நாள் மனோரமா அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு சென்று இருக்கிறார்.
அந்த சர்க்கஸ் நடக்கும் போது, ஒருவர் வாய் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் சில மீன்களையும் விழுங்கி திரும்ப எடுக்கும் சாகசங்களை செய்யக்கூடியவர். அதேபோல தான் அன்றும் அந்த சர்க்கஸ்காரர் செய்தார். ஆனால் விழுங்கிய மீன்களை எடுக்க முற்படும்போது வாயிலிருந்து ரத்தம் கொட்டியது.
உடனே அந்த சர்க்கஸ்காரர் யாரோ மந்திரவாதி என்னை மந்திர கட்டு போட்டு வைத்திருக்கிறார். தைரியம் இருந்தால் வெளியே வா என கூற, கூட்டத்தில் இருந்த மந்திரவாதி வெளியே வந்து முடிந்தால் இந்த கட்டை அவிழ்த்து உன்னை நீ காப்பாற்றிக் கொள் என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். ஆனால் சர்க்கஸ்காரர் மீன்களை எடுக்க முடியாமல் தவித்தார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மனோரமாவுக்கு பயமாக போய்விட்டது. சர்கஸ் கம்பெனியில் சேரமாட்டேன் என தனது தாயாரிடம் பிடிவாதமாக சொல்லிவிட்டார்.
இந்த சம்பவம் நடக்காவிட்டால் தமிழ் சினிமா அற்புதமான நடிகை மனோரமாவை இழந்திருக்கும். இந்த சம்பவத்தை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.