பாகுபலி படத்தை எடுத்து இந்திய அளவில் பிரமாண்ட டைரக்டராக மாறியவர் ராஜமவுலி. தொடர்ந்து அவரது இயக்கத்தில் வந்த ஆர் ஆர் ஆர் படமும் உலக அளவில் பேசப்பட்டு ஆஸ்கார் விருதும் வென்றது. ராஜமவுலி ஏற்கனவே அளித்த பேட்டியில், “இந்திய கதைகளை உலகத்துக்குச் சொல்ல விரும்புகிறேன். மகாபாரத கதையை படமாக்குவது என் நீண்ட நாள் கனவுத் திட்டம்” என்றார்.
இந்நிலையில், “மகாபாரத கதையை படமாக்கும்போது எத்தனை பாகங்களாக எடுப்பீர்கள்” என்று கேட்கப்பட்டது.
அதற்கு ராஜமவுலி, “நிச்சயம் பத்து பாகங்களாக எடுக்க வேண்டி வரும். அதற்கு முன்பாக நான்கு அல்லது ஐந்து படங்கள் எடுத்து விடுவேன். ஆகவே, மகாபாரதம் எடுக்க இன்னும் 10 அல்லது 12 ஆண்டுகள் ஆகலாம்” என்றார்.